திங்கள், 4 ஜூலை, 2011

உதயன் சரவணபவன் mp விபத்தில் உயிர்தப்பியுள்ளார்.

சிறுகாயங்களுடன் மயிரிழையில் உயிர்தப்பினார் சரவணபவன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பயணித்த வாகனம் மதவாச்சிக்கு அருகில் சங்கிலிகனதராவ பகுதியில் இன்று அதிகாலை பள்ளத்தில் பாய்ந்து விபத்துக் குள்ளானது.

இந்த விபத்தில் சிறுகாயங்களுடன் மயிரிழையில் சரவணபவன் உயிர்தப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கொழும்பிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த போது மதவாச்சி சங்கிலிகனதராவ பகுதியில் எதிரே வந்த வாகனம் வீதிக்கு நடுவில் பயணித்த காரணத்தால் அதிலிருந்து விடுபடுவதற்கு சாரதி முயற்சித்த போதே கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனினும் வாகனத்தில் பயணித்த பாதுகாப்பு அதிகாரியொருவர் காயமடைந்து அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான வாகனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூன்று பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் வாகனத்திற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தை வைத்தும்  பிரதேச சபை தேர்தலில் அனுதாபத்தை மேலும் பெற முயற்சிப்பார் சப்ரா நிதிகொம்பானி புகழ் ஈஸ்வரபாதம் சரவணபவன்/

கருத்துகள் இல்லை: