வியாழன், 16 ஜூன், 2011

காப்பாற்றப்பட்டது தமிழகம்: ஜெ.,க்கு நடிகர் ரஜினி பாராட்டு

சென்னை: "முதல்வர் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதன் மூலம், தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கிருந்து நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார். தற்போதுதான், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "உங்களின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்' என்றார். அத்துடன் ரஜினி குணமடைந்து, விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், "நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, ஜெயலலிதாவிடம் கூறினார். வெற்றி பெற்றதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இன்னும் ஒன்றரை மாதங்களில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே சென்னையில், ரஜினிகாந்த் சிகிச்சை பெற்ற போது, முதல்வர் ஜெயலலிதா நலம் விசாரித்ததை நினைவு கூர்ந்து, லதா ரஜினிகாந்த்தும் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ள

மகா நடிகன் ரஜனி சமசீர்கல்வியின் மிகப்பெரிய எதிரி ஏனைய பார்பனர்கள் போலவே பார்பனராகி விட்ட ரஜனியும் தனது மேட்டுக்குடி சுபாவத்தை காட்டியுள்ளார்.  
ரஜனியின் மனைவி லதாவும் ஒய் ஜி மகேந்திரனின் மனைவி மதுவந்தியும் சகோதரிகள்.
பிரபல தனியார் பார்பன கல்விநிறுவனம் பத்மா சேஷாத்திரி பள்ளிக்கூடம் இவர்களது குடும்ப சொத்தாகும் லதா சகோதரிகளின் தாயார்தான் திருமதி பத்மா சேஷாத்திரி. கணவர் பிரபல ஒய் ஜி பார்த்தசாரதி.
இவர்களது இன்னுமொரு கல்வி நிறுவனமான ஆஷ்ரம் ரஜனியின் சொந்த பள்ளிகூடமாகும். இவை எல்லாம் மேட்டுக்குடிகளின் பள்ளிக்கூடங்களாகும்.
சமசீர்கல்வி என்பது இவர்களின் எதிர்கால வியாபாரத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டது.
இவர்கள் மனதிற்குள் புழுங்கிய புழுக்கம் தான் ரஜனி மக்கள் ஒரு மாற்றம் தேவை என்று எண்ணுகிறார்கள் என தேர்தலின் பொது ரசிகர்களுக்கு கோடி காட்டியதன் மர்மம் திமுகவினர் கூட அப்போது அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போதாவது  சுயமரியாதை பெரியார் பார்பனர்களை ஏன் மிகவும் மோசமாக வெறுத்தார் என்று புரிகிறதா?
தங்களது சுயநலத்திற்காக லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்வியில் கைவைக்க துணிந்துவிட்டார்கள்.
இதில் பெரும் சோகம் என்னவென்றால், ரஜனி எதோ மகா ஞானியென்று குப்பனும் சுப்பனும் கூட இன்னும் நம்பிக்கொண்டு பாலாபிஷேகம்  என்று காவடி எடுக்கும் முட்டாள்தனம்.

கருத்துகள் இல்லை: