வெள்ளி, 17 ஜூன், 2011

வடமாகாண முதலமைச்சர் போட்டியிட அமைச்சர் டக்ளஸ் ஆர்வம்!


எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு தான் போட்டியிட விரும்புவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜ.ம.சு.மு. அரச அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட முற்பகுதியில் வடமாகாணசபைக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உயர் நீதிமன்ற தீர்ப்பொன்றுக்கு அமைய வடக்கும் கிழக்கும் மீண்டும் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டாலும் வடமாகாணத்திற்கு இதுவரை மாகாணசபையொன்று அமைக்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்திற்கு 2008ம் ஆண்டு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது.
ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடனான இத் தேர்தலில் போட்டியிடுவீர்கள் எனக் கேட்டபோது அவர் ஆம் என பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை: