சனி, 18 ஜூன், 2011

9 லட்சம் இலவச லேப்-டாப் வழங்க சர்வதேச அளவில் டெண்டர்

இந்த விஷயத்தில் அம்மா கருணாநிதியை FOLLOW செய்கிறார் ! இனி மேல லேப் டாப் மலிவா தமிழ் NAATULA கிடைக்கும் ! வாழ்க இலவசம் !

சென்னை: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, 9 லட்சத்து 12 ஆயிரம் இலவச லேப்-டாப் வழங்குவதற்காக, சர்வதேச அளவிலான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. லேப்-டாப் தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள், அந்நிறுவனத்தின் லேப்-டாப் மாதிரியை, "எல்காட்' நிறுவனத்திடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அளவில் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதாக, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அளவில், 10ம் வகுப்பில் 10 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 மாணவர்கள் 7.5 லட்சம் மாணவர்கள் உள்ள விவரத்தை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், அரசிடம் சமர்ப்பித்தனர். அது தவிர, கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் "எல்காட்' அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே கவர்னர் உரையில், இலவச லேப்-டாப் வழங்குவதை அரசு உறுதி செய்தது. இலவச லேப்-டாப் தயாரிப்பதற்கான சர்வதேச அளவிலான டெண்டர் அறிவிப்பை எல்காட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: முதல் கட்டமாக, 9 லட்சத்து 12 ஆயிரம் லேப்-டாப்கள் கொள்முதல் செய்ய, சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டுள்ளது. நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 11. அதற்கான வைப்புத் தொகை 20 லட்சம். கடைசி தேதியன்று மாலை, டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படுகின்றன. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு, லேப்-டாப் கொள்முதல் செய்வதற்கான அனுமதி உடனே வழங்கப்பட மாட்டாது. முதலில், தொழில்நுட்ப ரீதியாக டெண்டர் பரிசீலிக்கப்படும். இதில், அந்நிறுவனங்கள், அரசு விதித்துள்ள தொழில்நுட்ப தகுதிகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், அடுத்த கட்ட டெண்டருக்கு தேர்வு செய்யப்படும். முதல் டெண்டரில் தகுதிபெற்ற நிறுவனங்களுடன், அடுத்த கட்டமாக, விலை நிர்ணயம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் ஒத்துவரும் நிறுவனங்களுக்கு, லேப் -டாப் கொள்முதல் செய்வதற்கான ஆர்டர் வழங்கப்படும். லேப்-டாப்பில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய, தயாரிப்பு நிறுவனம், தாலுகா அளவில் சர்வீஸ் சென்டர் வைத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் முடியும் வரை இலவச சர்வீஸ் செய்து தர வேண்டும். டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், மாதிரி லேப்-டாப்களை, "எல்காட்' நிறுவனத்திடம் இந்த மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எடை 2 கிலோ 700 கிராமுக்குள் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில மொழி விவரங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்' என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் 22ம் தேதி, சென்னை அண்ணாசாலையில் உள்ள "எல்காட்' நிறுவனத்தில், லேப்-டாப் தயாரிக்க விரும்பும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதில், லேப்-டாப் தயாரிப்பில் ஏற்படும் சந்தேகங்களை, எல்காட் அதிகாரிகளிடம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

வசதிகள் அதிகம்: விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் அல்லது லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் முறையில் லேப்-டாப்பை இயக்கலாம். ஸ்டாட்டர் எடிஷன், கேமரா, ஒயர்லெஸ், "டிவிடி' ரைட்டர், வேர்டு, எக்சல் மற்றும் டேட்டா பேஸ் புரோகிராம்கள் மற்றும் கல்வி தொடர்பான சாப்ட்வேர்கள் இணைக்கப்பட்டிருக்கும். பெரிய அளவிலான ஸ்கிரீன், 2 ஜி.பி., ரேம், 320 ஜி.பி., ஹார்டுடிஸ்க் இருக்கும்.
maria alphonse - chennai ,இந்தியா
2011-06-18 08:21:15 IST Report Abuse
அம்மா செய்யும் இந்த திட்டம் பாராட்டுக்குரியது..இதையே கலைஞர் செய்திருந்தால் திட்டி தீர்த்திருப்போம்..நாட்டை இலவசங்களால் சோம்பேறி ஆக்குகிறார் என்று ...இதுதான் எங்கள் நடுநிலைமை.
RAMASAMY SEKAR - chennai,இந்தியா
2011-06-18 08:31:16 IST Report Abuse
மத்திய அரசு ரூபாய் .1500 க்கு, மானியத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குகிறது. ஆனால் நமது மாநில அரசு ரூபாய் 20000 க்கு சர்வதேச அளவில் டெண்டர் கோருகிறதே? அடுத்த திகார் அம்மாவுக்குத் தானோ?...
karunkal pa. mohankumar - chennai ,இந்தியா
2011-06-18 06:58:55 IST Report Abuse
இந்த லேப்-டாப் தற்போது வழங்ககூடாது.காரணம் மாணவர்கள் இதனை ஒரு பொழுதுபோக்கு கருவியாக பயன்படுத்துவார்கள்.+2 மாணவர்கள் தேர்வு எழுதி பள்ளியில் இருந்து T .C வாங்கும்போது வழங்க வேண்டும் . அப்போதுதான் இது பயன் உள்ளதாக இருக்கும். இல்லையெனில் தற்போது செல்போன் பயன்பாடு மாதிரி தேவை இல்லாத விசயங்களை டவுன்லோட் செய்தும் pendrive பயன்படுத்தியும் படிப்பை கெடுத்து விடுவார்கள்.அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். நல்ல படிப்புக்காக பல ஏழை குடும்பத்தினர் பணம் செலுத்தி பல்வேறு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.அவர்கள் ஏமாறகூடாது. நல்ல திட்டம் கல்விக்கும் மருத்துவத்துக்கும் விவசாயத்துக்கும் எவ்வளவு இலவசம் கொடுத்தாலும் நல்லதுக்கே.
 
Saravanan Marimuthu - canada,கனடா
2011-06-18 06:31:01 IST Report Abuse
இதுல உள்ள பிரக்டிகல் பிரச்னை பாதி ரொம்ப யோசிக்கணும். 1 ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு தர வேண்டும். கலர் டிவி , மிக்சி மாதிரி இது ஒரு முறை கொடுக்கும் இலவசம் அல்ல. 2 என்ன தான் பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தாலும் அவங்க எக்ஸாம் க்கு பாட புத்தகத்தை தாண்டி எந்த கேள்வியும் கேக்க போவது இல்லை . எனவே மாணவர்க எதற்ககா லேப்டாப் ஐ படிப்புக்கு பயன்படுத்த போகிறார்கள். அதை ஒரு பொழுது போக்கு விசயமாக மட்டுமே பயன்படுத்துவார்கள்.
Thennavan - Chennai,இந்தியா
2011-06-18 04:58:15 IST Report Abuse
இது முந்திய திமுக அட்சியில் செய்யப்பட்ட இலவச டிவி திட்டத்தை விட மோசமான இலவச திட்டம்......இங்கு சொல்லபட்டு இருக்கிற லேப்டாப் வசதி குறைந்த பட்சம் 20 ஆயரம் ரூபாயாவது ஆகும்...இவர்கள் சொல்லி இருக்கிற 18 லட்சம் பேருக்கு வழங்க குறைந்தது 3600 கோடி வேண்டும்...அதுவும் ஒவ்வொரு ஆண்டும்....இது தேவையா......ஆனால் அதை முறையாக பயன்படுத்துபவர் ஒரு பத்து சதவிதம் பேர் இருந்தாலே ஆச்சரியம் தான்.....இதற்க்கு பதிலாக எல்லா பள்ளி,கல்லூரிக்கும் அரசு செலவில் ஒரு லைப்ரரி கம்ப்யூட்டர் இன்டர்நெட் வசதியுடன் செய்து தரளாம்....அதன் முலம் மாணவரும் பயன் பெறுவார்......அதை விட்டு எல்லாத்துக்கும் லேப்டாப் கொடுத்தா அதுவும் ஒரு இலவச டிவியாக மாறி நம்ம பசங்க உட்கார்ந்து சிடி போட்டு படம் பாத்துகிட்டு இருப்பான்..
 

கருத்துகள் இல்லை: