சனி, 27 ஜனவரி, 2024

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை.... ! ?

ராதா மனோகர் : நேதாஜி  சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை!
என்ற கோணத்தில் சற்று நிதானமாக சிந்தித்தால் இந்த விடயத்தில் பல மர்மங்கள் இருப்பது புரியும்!
அந்த விபத்து சம்பவம்  நடந்ததா இல்லையா என்ற வாதப்பிரதி வாதங்கள் ஒரு புறம் இருக்க இப்படித்தான்  நடந்திருக்கும் என்று பலராலும் யூகிக்கப்படும் விடயம் ஒன்றுள்ளது.
அது நேதாஜிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.
என்னதான் சுதந்திரம் அவசியம் என்றாலும் அவர் ஹிட்லரோடு மிகவும் அன்னியோன்னியமாக உறவாடி உதவி கேட்டமை எந்த மனிதரால் ஏற்று கொள்ள முடியாத விடயம்!
அது நாகரிக உலகில் யாராலும் மன்னிக்க முடியாத ஒரு போர் குற்றம் ஆகும்.


இன்றும்  கூட பழைய நாசிகளை உலக நாடுகள் வேட்டை ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன..  
ஹிட்லரின் நாசிப்படையினரின் கொடிய போர்குற்றம் இழைத்ததாக நூரம்பெர்க்  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான பழைய நாசிப்படையினர்  இன்றும் கூட வேறு வேறு
பெயர்களில் வேறு வேறு நாடுகளில் பயந்து பயந்துதான் வாழ்கிறார்கள்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்  அவர்கள் நாசிப்படையில் இணையவில்லை என்றாலும் அவர்களிடம் ராணுவ உதவி  கேட்டமையானது சாதாரண குற்றம் அல்ல.
ஹிட்லரின் மனித குலவிரோத நடவடிக்கைகள்  எல்லாம் நேதாஜிக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அவர் அதை  பொருட்படுத்தவில்லை.

நல்ல  காலம் ஹிட்லர் நேதாஜிக்கு கடைசியில் கைவிரித்து விட்டார்.
இந்தியர்களை  இன்னும் பல ஆண்டுகள் பிரிட்டிஷாரே ஆளவேண்டும் என்ற கொள்கையை நேதாஜியிடம்  கூறி அவரை பக்குவமாக சகல வசதிகளும் செய்து கொடுத்து ஒரு நீர்மூழ்கி கப்பல்  மூலம் ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார்.
ஹிட்லர் நினைத்தால் நேதாஜியை என்னவும்  செய்திருக்க முடியும் ஆனால் செய்யவில்லை.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அடுத்ததாக செய்த விடயம்  ஹிட்லர் கொடுத்த  நீர்முழ்கி கப்பலில் ஜப்பான் சென்றார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு  அளிக்கப்பட்டது.  .
ஜப்பானியர்கள் நேதாஜியை ஒரு ஹீரோவை போன்றே வரவேற்றனர்.
அவர்கள் ஏற்கனவே  கண்ட யுத்த வெற்றிகள் தொடரும் என்றுதான் நம்பினார்கள். ஆனால் விதி என்னவோ  ஜப்பானியர்களுக்கு ஆதரவாக.இருக்கவில்லை!
ஜப்பானியர்கள்  பெரும் அழிவை சந்திக்க வேண்டியதாயிற்று. அவர்களுக்கு  நேர்ந்த தோல்விகள் நேதாஜிக்கு அவர்கள் கொடுத்த நம்பிக்கையை தகர்த்தது!
.
தொடர் தோல்விகளையே சந்தித்து வந்த நேதாஜி அடுத்த முயற்சியாக ரஷ்ய தூதரகத்தோடு தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினார்
இதன் பெறுபேறாக ரஷ்யாவை நோக்கி விமானத்தில் பயணமானார்!
.
இதன் பின்பு  நடந்தவை மர்மமாக இன்றுவரை தெளிவு பிறக்கவில்லை!
அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது!
.
இதன் பின்னணியில் பல செய்திகள்  உலா வருகிறது.
அவற்றில் சில செய்திகள்  உண்மைதான்.

அன்றைய உலக போர் சூழ்நிலையில் நேதாஜி வெளிப்பட்டிருந்தால்  அமெரிக்க பிரிட்டீஷ் ரஷ்ய படைகளால் கைது செய்யப்பட்டிருப்பார்
அது மட்டுமல்ல  நாசிகளுக்கு எதிராக  நூரம்பெர்க்கில் நடந்து கொண்டிருந்த  போர்குற்ற விசாரணைக்கு ஒரு சாட்சியாக அல்லது குற்றவாழியாக கூட நிறுத்த  பட்டிருப்பார்!

அந்த ஆபத்தில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தப்பி விட்டார்!
அன்று அந்த விமான விபத்து என்ற ஒன்று மட்டுமே அவரை அதில் இருந்து காப்பாற்றியது என்பதுதான் உண்மை!

அப்படியானால் அவரை தப்ப வைத்தது யார்?
அவர் வெளி உலகுக்கு வர விரும்பியிருப்பாரா?
வந்தால் என்ன நடந்திருக்கும் ?
அவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு தப்பி ஓட கண்டுக்காம விடப்பட்டார் என்று ஒரு செய்தியும் பல தடவை வளம் வந்தது!
திரு ஜவஹர்லால் நேரு அவர்கள் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி நேச நாடுகளின் உதவியோடு நேதாஜியை காப்பாற்றினார் என்றும் செய்திகள் உள்ளன.
.அவர் சுதந்திரமாக வெளியே வந்தால் அவரை கைது  செய்து விசாரணைக்கு ஒப்படைத்து இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் நிச்சயம் நேருவுக்கு  வந்திருக்கும்! .
அது அவ்வளவு இலகுவான காரியமாக இருந்திருக்காது.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஒரு தேசிய தலைவராக அதுவும் ஹீரோவாக மக்களால் கருதப்பட்டவர் .
அவருக்காக உயிரை கொடுக்க கூடியவர்கள் ஆயிரம் ஆயிரமாக அவரது தேசிய ராணுவத்தை சேர்ந்தவர்கள்

அவர்களின் தியாகம் கூட நேதாஜியின் ஹிட்லர் தொடர்பால்  மாசு பட்டிருக்கும்.

லட்சக்கணக்கான யூதர்களையும் இதர நலிவடைந்த மக்கள் கூட்டத்தையும் கொன்று குவித்த ஹிட்லரோடு எப்படி ஒரு சுதந்திரத்திற்காக போராடும் தலைவர் நட்பு கொண்டாடி இருக்க முடியும்?
நிச்சயம் இந்த வரலாறு உலகுக்கு தெரிய வரும்போது இந்தியாவுக்கு இது நல்ல பெயரை பெற்று தராது.

இந்தியா என்றால் காந்தி தேசம் என்றுதான் இன்றளவும் மேற்குலகில் அறியப்பட்டு இருக்கிறது .
ஒரு இந்திய தேசிய தலைவர்  ஹிட்லரின் உள் வட்டத்திற்குள் இருந்தார் என்பதே தற்போது உலகிற்கு பெரிதாக தெரியாது.
இது உலக பொது வெளியில் பேசப்பட்டால்  இந்தியாவின் பாரம்பரிய விழுமியங்கள் மீது விழுந்த மற்றொரு பாசிச நிழலாகவே இருக்கும்!

 

கருத்துகள் இல்லை: