திங்கள், 31 மே, 2021

குறைந்த தொற்று;500 ஐ நெருங்கிய ஒருநாள் உயிரிழப்பு'-தமிழகத்தின் இன்றைய கரோனா நிலவரம்!

nakkeeran : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28,964  பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 ஆவது நாளாக தமிழகத்தில் முன்பை விட குறைந்த பாதிப்பு தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில், சென்னையில் ஒரே நாளில் 2,689 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் சென்னையில் மட்டும் 93 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3,05,546  ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று 32,982  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 17,39,280 ஆக அதிகரித்துள்ளது

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 493 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 294  பேரும் தனியார் மருத்துவமனைகளில்  199  பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 23,754 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,557 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: