திங்கள், 8 மார்ச், 2021

திமுகவுடன் மார்க்சிஸ்ட் மீண்டும் பேச்சுவார்த்தை!

nakkeeran : தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் மற்றொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியுடன் இன்று (08.03.2021) பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இரண்டு கட்டமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்த நிலையில், இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: