வியாழன், 26 டிசம்பர், 2019

அஸ்ஸாம் ரூ 7836 கோடி செலவில் குடிமக்கள் பதிவேடு சரிபார்த்தல் (Review) ...

Jose Kissinger : அசாமில் 3.3 கோடி மக்களில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ிகள், வங்காளிகள்) புதிதாக குடியுரிமை கிடைக்கும். மீதியுள்ளவர்கள் வதை முகாம்களுக்கு அனுப்பப்படுவர்.
முதலில் விடுபட்ட மக்கள் 40 இலட்சம். இதற்கு அரசு செலவு செய்த தொகை ரூ1600 கோடி. விடுபட்ட 40 லட்சம் பேரும் தங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட மேல்முறையீட்டு சரிபார்த்தல் (Review) நடவடிக்கையின் போது ரூ 7836 கோடி செலவு செய்துள்ளனர். அதன் பின்னும் இறுதிப் பட்டியலில் விடுபட்டவர்கள் 19 இலட்சம். அதில் 15 இலட்சம் பேர் இந்துக்கள். அவர்களுக்கு வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகள் என்று சொல்லி (உண்மையிலேயே இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த பழங்குடிகள்.
அந்த வதை முகாம்களில் இருப்போருக்கு உணவு, இருப்பிடம், அடிப்படை தேவைச் செலவு, பாதுகாப்பு படைக்கு செலவு என மாதாமாதம் சில கோடிகள்.
இந்தியா முழுவதும் அது போல கணக்கெடுத்து மிகமிகக் குறைவாகவே வைத்துக் கொண்டாலும் ஒரு சதவீதம் பேர் என்றாலும் 1.3 கோடி பேர் ஆகிறது. கணக்கெடுக்கவே ஒரு ஐம்பதாயிரம் கோடி ஆகும்.
பணமதிப்பிழப்பு செய்த அதே போல இதுவும் எலியைப் பிடிக்க அரண்மனையைக் கொளுத்தியது போல, இந்தியாவை மீளாத் துயரத்தில், மீண்டு எழவே முடியாத வெறுப்பு, பிரிவினை, பொருளாதார வீழ்ச்சியில் தள்ளப் போகிறது.

கருத்துகள் இல்லை: