வியாழன், 10 அக்டோபர், 2019

ராஜீவ் கொலை விசாரணையில் நெடுமாறன் தப்பியது எப்படி?.. காசி ஆனந்தன்? சம்பவத்தில் நளினி எப்படி உயிர் தப்பினார்?

வளன்பிச்சைவளன்'; பதிவு - 145
ஈழப்போரும் தமிழக #ஈழத் தமிழர்களின் பொறுப்பும் கடமையும்!
சாத்தானின் படைகள் புலிகளின் நூல்!
ராஜீவிற்கு எதிரி நான் பிரபாகரன்!
புலிகள் கொலை செய்யவில்லை!
இம்மி பிசகாத திட்டம்! கிட்டு தொடர்ந்து மறுப்பு!
ராஜீவ்கொலை சதியில் விசாரிக்கப்படாத புலிகளின் PRO நெடுமாறன்!
ராவின் கூட்டாளி நெடுமாறனின்
வஞ்சக புளுகுக்கு மறுப்பு
சாத்தானின் படைகள்
இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்தில் நடந்த அட்டூழியங்களை விவரிக்கும் மிகப் பிரம்மாண்டமான ஆவணம் ஒன்று (ஏற்கெனவே இது குறித்துக் குறிப்பிட்டிருக்கிறேன் சாத்தானின் படைகள் என்ற புத்தகம்.) புலிகள் இயக்கத்தால் தயாரிக்கப்பட்டது.
இரண்டு வால்யூம்களாக வெளியிடப்பட்ட அந்தப் புத்தகம், சென்னையில் அண்ணா சாலையில் உள்ள ஓர் அச்சகத்தில்தான் அச்சிடப்பட்டது. சி.பி.ஐ. அதனைக் கைப்பற்றியதற்கு முன்னால், அது குறித்த அடிப்படைத் தகவல்கள் கூட ராவுக்கோ ஐபிக்கோ தெரிந்திருக்கவில்லை!
அந்தப் புத்தகம், வெறும் பிரசாரப் புத்தகமல்ல. ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகள் ஏன் கொன்றார்கள் என்பதற்கான காரணங்களை மிகத் துல்லியமாக நாம் அந்தப் புத்தகத்தின் பக்கங்களிலிருந்து பெற முடியும்.
ஏப்ரல் 1, 1990 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் வெளியிட்ட ஓர் அறிக்கையில், I am not against people, I am not against the Indian Government, I am against the former leadership’ ‘நான் இந்திய மக்களுக்கு எதிரானவனோ, நான் இந்திய அரசின் எதிரானவனோ இல்லை, நான் முன்னாள் தலைமைக்கு எதிராக இருக்கிறேன் ‘ என்றுபிரபாகரன் மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

இது அனைத்து ரா, ஐ.பி. அதிகாரிகளுக்கும் தெரியும். அப்படியிருந்தும் விடுதலைப் புலிகள் மீது ரா தலைமைக்குத் துளி சந்தேகமும் கிடையாது!
மேற்படி அறிக்கையின் அடிப்படையில்தான் பின்னால், பத்திரிகையாளர் அனிதா பிரதாப் பிரபாகரனை வவுனியா காட்டில் சந்தித்து பேட்டி கண்டபோது, ‘ராஜிவ் காந்தி மீது உங்களுக்கு அப்படியென்ன விரோதம்?’ என்று கேட்டார்.
பிரபாகரன் அதற்கு ஐந்து அடுக்குகளாகக் காரணத்தைச் சொல்லியிருந்தார்.
1. இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது எங்கள் கொள்கைக்கு விரோதமானது.
2. அப்படியும் நான் ராஜிவை நம்பினேன்.
இந்தியா எமது மக்களுக்கு நல்லது செய்யும் என்று உளமார எண்ணி, அதையே எங்கள் மக்களுக்கும் எடுத்துச் சொல்லி (சுதுமலைக் கூட்டம்) ஒப்பந்தத்தை விருப்பமில்லாவிட்டாலும் ஏற்றோம்.
3. அந்த நம்பிக்கையை, திலீபனை இறக்கவிட்டு வேடிக்கை பார்த்த இந்திய ராணுவத்தின் மெத்தனம் சிதைத்துவிட்டது. இந்திய அரசும் வாய் திறக்காமல் இருந்துவிட்டது.
4. எங்களை ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லிவிட்டு, எங்களிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களைப் பிற ஈழ இயக்கங்களுக்கு அளித்தார்கள்.
5. இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் வேண்டுமென்றே இலங்கை அரசிடம் அவர்களை ஒப்படைத்து துரோகம் செய்தார்கள்.
ராஜிவ் காந்தி வரை தொடர்புகொண்டு, நான் அவர்களை விடுவிப்பதற்காகப் போராடினேன். பலனில்லை.
என் கமாண்டர்கள் சயனைட் அருந்தி உயிர்விட வேண்டியதாயிற்று.
ஐ.பி.கே.எஃப் இலங்கைக்கு அனுப்பப்பட்டது, இலங்கைத் தமிழரின் நலனுக்காக அல்ல.
தன் அண்டை நாட்டு விஷயத்தில் தன்னுடைய பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்க முற்றிலும் சுயநலமுடன் இந்தியப் பிரதமர் மேற்கொண்ட முயற்சியே அது என்று அழுத்தம் திருத்தமாக அந்தப் பேட்டியில் பிரபாகரன் பேசியிருப்பார்.
முத்தாய்ப்பாக, ‘அவர் என் எதிரி’ என்றே குறிப்பிடுவார்.
ஏப்ரல் 10, 1990ல் வெளியான அந்தப் பேட்டியைப் படித்த எந்த ஒரு உளவுத்துறை அதிகாரியும் ராஜிவுக்கு எதிரான சக்திகளின் பட்டியலில் விடுதலைப் புலிகளை முதலிடத்தில் வைப்பார்கள்.
ஆனால் படுகொலைக்குப் பிறகு சி.பி.ஐக்குச் சரியான ஆதாரங்கள் கிடைத்து நாங்கள் வழக்கில் முன்னேறத் தொடங்கிய சமயத்திலும் ‘விடுதலைப்புலிகள் இதனைச் செய்திருக்க மாட்டார்கள்’ என்று ராவின் தலைவர் சொல்கிறார் என்றால் நமது உளவுத்துறையை எந்தளவு நம்மால் நம்ப இயலும்?
எப்போது தமிழ்நாட்டில் துணிகரமாக வந்து இறங்கி பத்மநாபாவைக் கொன்றுவிட்டுத் திரும்பினார்களோ, எப்போது அடுத்த குறி வரதராஜப் பெருமாள் என்று முடிவு செய்து திரும்பவும் ஆள் அனுப்பினார்களோ, எப்போது தமிழகத்தில் தனக்கென ஓர் உளவு அமைப்பு தேவை என்று முடிவு செய்து முருகனையும் அவரது டீமையும் அனுப்பிவைத்தார்களோ, அப்போதே முடிவு செய்துவிட்டார்கள் அடுத்த இலக்கு ராஜிவ் காந்தி என்று
அக்டோபர் 1990ல் தீர்மானித்து ஜனவரியில் ஆள்களை அனுப்பத் தொடங்கி மே மாதம் திட்டமிட்டபடி காரியத்தை முடித்தது விடுதலைப் புலிகள்.
படுகொலைச் சம்பவம் நடந்து முடிந்தபிறகு, உடனடியாக லண்டனில் அப்போது இருந்த கிட்டு, ‘நாங்கள் செய்யவில்லை, நாங்கள் சம்பந்தப்படவில்லை’ என்று அறிக்கைகள் விட்டுக்கொண்டே இருந்தார்.
அதன் எதிரொலியாகத்தான் ராவின் தலைவரும் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தார்.
இந்த எரிச்சல் ஒருபுறம் இருக்க, அதே கிட்டு தனது அறிக்கையொன்றில், ‘நாங்கள் செய்யவில்லை. யார் செய்தது என்பதை இந்தியக் காவல் துறை கண்டுபிடிக்கட்டும்’ என்றும் சொல்லியிருந்தார். இந்தச் சொற்களில் தெரியும் அகம்பாவத்தின் பின்னணி மிகவும் சுவாரசியமானது.
கண்டிப்பாகத் தாங்கள்தான் செய்தோம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்று அவர்கள் நம்பினார்கள். அது வெறும் நம்பிக்கையல்ல. கொலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டதே அத்தனை சாமர்த்தியமாகத்தான்.
மிகுந்த புத்திசாலித்தனத்துடன், சற்றும் பிசகாத கவனத்துடன், எங்கும் பிழைகளோ, பிசிறுகளோ இல்லாமல்தான் திட்டம் வரையறுக்கப்பட்டிருந்தது.
ஒரு விஷயம் சொன்னால் வியந்துபோவீர்கள். விடுதலைப் புலிகளின் திட்டப்படி, மனித வெடிகுண்டாக ஸ்ரீபெரும்புதூர் சென்ற தணு என்கிற அந்த ஒரு பெண்ணைத் தவிர, அவர்கள் குழுவில் வேறு யாருமே இறந்திருக்கும் வாய்ப்பு கிடையாது.
குறிப்பாக, ஹரி பாபு. ஹரி பாபு அடிபட்டுச் செத்துப் போனது மிகவும் தற்செயலான ஒரு நிகழ்வு.
மேடையில் மாலை அணிவித்து, அதை அவர் கீழே இருந்து புகைப்படம் எடுத்திருப்பாரேயானால் ஒரு பிரச்னையும் இல்லை. ராஜிவ் காந்தியும் தணுவும் மட்டுமே இறந்திருப்பார்கள்.
புலிகளின் திட்டப்படி மற்ற அனைவரும் தப்பித்து, அந்தப் புகைப்பட ஆதாரம் கூடக் கிடைக்காமல் இன்றுவரை சி.பி.ஐ. அலைந்துகொண்டிருக்கும்.
மாறாக, ராஜிவ் வருகை தாமதமாகி, சிவப்புக் கம்பளப் பகுதியிலேயே மாலை அணிவிக்கும் வைபவம் அரங்கேற, அதிலும் எங்கே பிசகிவிடப் போகிறதோ என்று கடைசி நிமிடத்தில் பயந்த தணு, ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க, சரியாகப் படம் பிடிக்க வேண்டுமே என்கிற பதற்றத்தில் ஹரி பாபு நெருங்கி வந்து கமராவை உயர்த்திப் படமெடுக்க, திட்டமிட்ட சமயத்துக்கு முன்னாலேயே குண்டு வெடித்து ஹரி பாபுவும் இறந்து போனார்.
திரும்பவும் சொல்கிறேன், ஹரி பாபு இறக்க நேரிடும் என்று புலிகள் எதிர்பார்க்கவில்லை.
சி.பி.ஐயிடம் வாக்குமூலம் அளித்த நளினி கூட இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். ராஜிவ் படுகொலை அளித்த அதிர்ச்சியைக் காட்டிலும் ஹரி பாபு இறந்த துக்கம் அவர்களுக்குப் பெரிதாக இருந்திருக்கிறது.
எந்த வகையிலும் அடையாளம் காண முடியாதபடி திட்டத்தை வகுத்திருக்கிறோம் என்கிற பெருமிதம்தான் கிட்டுவின் அறிக்கையில் வெளிப்பட்டிருந்தது.
சி.பி.ஐ அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டது. ‘இந்திய காவல் துறை முடிந்தால் கண்டுபிடிக்கட்டும்’ என்று சொன்னாரல்லவா? அதைத்தான் செய்தோம்.
சதித்திட்டத்தின் தொடக்கப்புள்ளியில் இருந்து இறுதிவரை அவர்கள் சென்ற பாதை, சிந்தித்த விதம், செய்த காரியங்கள், சந்தித்த இடர்ப்பாடுகள், அனைத்தையும் மீறி திட்டத்தை எப்படிச் செய்து முடித்தார்கள், யார் யாரெல்லாம் அதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்று ஓர் இண்டு இடுக்கு விடாமல் துருவித் துருவிக் கண்டுபிடித்துக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தினோம்.
ஹரி பாபுவின் கேமரா, எங்களுக்கு விடுதலைப் புலிகளைச் சுட்டிக்காட்டியது என்றால், நளினி பிடிபட்டு, அவரளித்த வாக்குமூலங்களின் மூலம் வழக்கின் அனைத்து முடிச்சுகளும் அவற்றை அவிழ்க்கும் சூத்திரங்களும் பிடிபட்டன. என்னைப் பொருத்தவரை ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணை என்பதை வெற்றிகரமாக முடித்து வைத்தவர் நளினிதான்.
பிறகு முருகன் மற்றும் சின்ன சாந்தன். அவர்கள் அளித்த விவரங்கள்தாம் இந்த வழக்கின் வேர்களைக் கண்டடைய எங்களுக்கு மிகவும் உதவி செய்தன.
இவ்வாறு ரகோத்தமன் குறிப்பிடுகிறார்
#கொலைச் சதியில் விசாரிக்கப்படாத
#புலிகளின் Proநெடுமாறன்
நெடுமாறனின் ஈழப்பயணங்களுக்கு பின் புலிகள் புதிய அரசியல் முடிவெடுத்து செயல்படுவது நிசர்தசனம். டெலோ அழிப்பு, இந்திய அமைதிப் படையுடன் மோதல் என்ற வரிசையில் 1991 பிப்ரவரி 21 ல் ஈழத்தில் நெடுமாறன் பிரபாகரனை சந்திக்கிறார். புலிகள் ஜெயலலிதா உறவுக்கு அடித்தளமிட்டு ஜெயலலிதா மூலம் புலிகள் ராஜீவை சந்திக்க ஏற்பாடு இதன் படி காசிஆனந்தன் புலிகளின் சார்பில் ராஜீவை மார்ச் 5 ல் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பு பத்திரிகைகளில் வெளிவரவில்லை. கிட்டு லண்டனில் இச்சந்திப்பை சுட்டிக் காட்டி புலிகள் ராஜீவ் நல்லுறவு உள்ளது எனவே புலிகள் ராஜீவை கொல்ல காரணம் இல்லை என வாதிடுகிறார். ராஜீவும் புலிகள் தம்முடன் நல்லுறவில் உள்ளார்கள் என நம்பினார். ராஜீவ் இறுதியாக சென்னைக்கு கொல்லப் படும் அன்று புலிகளின் சார்பில் காசிஆனந்தன் சென்னை விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார். இப்படியாக தங்கள் மீது சந்தேகம் வராத அளவு புலிகள் நடந்து கொண்டனர். இந்திய உளவு அமைப்பு ரா புலிகளுக்கும் ராஜீவ் கொலைக்கும் தொடர்பில்லை என சொல்லி வந்தது. ரா விற்கும் தனக்கும் உள்ள உறவை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் நெடுமாறனை ராஜீவ் கொலைவழக்கில் சிபிஐ யும் விசாரிக்காது ஆச்சர்யம். ஜெயின் கமிஷன் திமுக தலைவர் கருணாநிதியை விசாரித்தது ஆனால் நெடுமாறனை விசாரிக்காத மர்மம். ராஜீவ் புலிகள் சந்திப்பிற்கு மூன்று மாதம் முன் ஈழம் சென்று வந்த நெடுமாறன் விசாரணை வளையத்தில் வராதது பார்பணீயத்திற்கு அவர் ஆற்றும் அடிமை சேவகமே காரணமாகலாம்.
#இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் ராமதாஸ், வை கோ, திருமா, தா. பாண்டியன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்களையும் இல. கணேசன் உள்ளிட்ட இந்துவ சக்திகளையும் ஈழப்பிரச்சனை தொடர்பான இணைப்பு புள்ளியாக பார்பணீயத்திற்கு தொடர்ந்து சேகவம் செய்தவர்
#நெடுமாறனின் வஞ்சகப் புளுகிற்கு
#மறுப்பு
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை திமுக தலைவர் கருணாநிதி எதிர்க்கவில்லை என தொடர்ந்து புளுகி வருகிறார். இதற்கு நமது பதிவில் 17 மரணம், கிட்டு திமுக தலைவர் கருணாநிதி சந்திப்பு, திமுக அமைதிப்படை அட்டூழியங்களை கண்டித்து போராட்டம் தொலைக்காட்சியில் பொய் செய்தி என தொலைக்காட்சி பெட்டியை உடைத்து போராட்டம் என நாம் பதிவு செய்து உள்ளோம். சுப. வீ அவர்கள் நூலில் இருந்து மறுப்பு.
1987ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களுக்கு உடன்பாடில்லாத இந்திய - இலங்கை உடன் பாட்டை அதாவது ராஜீவ் - ஜெயவர்தன உடன்பாட்டைக் கலைஞர் கண்டிக்கவில்லை என்றும் சொல்லி வருகிறார் நெடுமாறன்.
ஆனால் அதே 1987ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று சேலத்திலும், 10 அன்று வேலூரிலும் கலைஞர் பேசும் போது, “கந்தன் நிலத்தைக் கருப்பன் விற்கிறான். கருப்பன் கந்தனிடம் வாங்குகிறான். ஒப்பந்தத்தில் கையயழுத்துப் போடுகிறவர்கள் யார்? கந்தனும் கருப்பனும்தான் கையயழுத்துப் போட வேண்டும். வேண்டுமானால் பக்கத்தில் இருக்கும் கடம்பன் சாட்சிக் கையயழுத்துப் போடலாம்... சாட்சியும், நிலத்தை வாங்குகிறவனும் போட்டுக்கொண்டால் அந்த அக்ரிமென்ட் செல்லுமா? அந்த ஒப்பந்தம் செல்லாது. இன்றைக்கு அப்படித்தான் ராஜீவ்காந்தி போட்ட கையயழுத்து சாட்சிக் கையயழுத்து. ஜெயவர்தனாவோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய கையயழுத்து எங்கே?” என்று ராஜீவ் - ஜெயவர்தனாவின் ஒப்பந்தத்தைக் கண்டித்துப் பேசியக் கலைஞரின் பேச்சைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர், அந்த ஒப்பந்தம் குறித்த நிகழ்வையும் பதிவு செய்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மருத்துவக் கல்லூரியில் 25 இடங்களும், பொறியியல் கல்லூரியில் 25 இடங்களும், வேளாண்மைக் கல்லூரியில் 10 இடங்களும், தொழில் நுட்பக் கல்லூரியில் 35 இடங்களும் ஈழ மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டதை, ஜெயலலிதா ஆட்சியின்போது, அந்த உரிமையை மறுத்துவிட்டார். அதனால் அவரின் ஆட்சிக் காலமான 5 ஆண்டுகளில் 125 மருத்துவர்களை, 125 பொறியாளர்களை, 50 வேளாண் திறனாளர்களை, 125 பொறியாளர்களை ஈழத்தமிழ்ச் சமூகம் இழந்தது. மீண்டும் கழக ஆட்சியின்போது, இழந்த அனைத்துக் கல்வி வாய்ப்புகளையும் மீட்டு மீண்டும் தந்த கலைஞர், சட்டத்துறையிலும் 5 இடங்கள் ஒதுக்கித்தந்தார்.
தொடரும்

கருத்துகள் இல்லை: