புதன், 9 அக்டோபர், 2019

பத்மபூஷன் நாகசாமி தமிழை தாழ்த்தி, இழிவுப்படுத்தி Mirror of Tamil and Sanskrit என்ற நூலில் எழுதியுள்ளார்.

Prakash JP : கீழடியை தமிழர் பெருமையாக ஏற்க்க மறுக்கும் ஆரிய நச்சு
நாகசாமியின், முந்தைய தமிழ் விரோத நடவடிக்கைகள் ஒரு பார்வை.. தொல்லியல் துறையில் வேலை செய்தபோது, தமிழர் பெருமைகளை மூடிமறைக்கும் வேலைகளைத்தான் இந்த நாகசாமி செய்து கொண்டிருந்தார்..
பிஜேபி மத்திய மோடி அரசால் “பத்ம பூசன்” விருதளிக்கப்பட்டுள்ள புள்ளியில் நிபுணர் இரா நாகசாமி, தன் The Mirror of Tamil and Sanskrit” என்னும் நூலில் முன்வைத்துள்ள முடிவுரைகள்:
1. தமிழ், தன் ஆற்றலால் செவ்வியல் மொழி ஆகவில்லை. சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிட மிருந்து கடன் பெற்று வளர்ந்து செவ்வியல் மொழி எனப்படுகிறது.
2. தொல்காப்பியம் இலக்கண நூலன்று; பரத முனிவரைப் பின்பற்றி எழுதப்பட்ட ,நடனப் பாடல்களுக்கான கருத்தமைந்த தொகுப்பு அது.
3. சிலப்பதிகாரம் வரலாற்றுக் காபியமன்று; அது முழுவதும் புனைந்து
கட்டப்பட்ட ஒரு புனை கதை இலக்கியம். அது முழுவதும் நாட்டியப் பாடல்களின் தொகுப்பு.
4. தமிழ் எழுத்துகள் பிராமி என்ற கல்வெட்டு எழுத்துகளைப் பார்த்து வடிவமைக்கப்பட்டன.
5. தமிழர் 'பா'வும் பரத முனிவரின் ‘யமகம்’ என்ற மடக்கணியைக் கொண்டே வளர்ந்துள்ளன.
6. தமிழர்கள் வேதக் கடவுளர்களையே வணங்குகின்றனர்.
7. தமிழர்க்கெனத் தனி வாழ்வுநெறி இல்லை. வடமொழி, வேதநெறி மரபு வாழ்வையே பின்பற்றி வாழ்கின்றனர்.

8. தமிழரின் கலை , இசை, நடனம், இலக்கியம், எல்லாம் கடன் பெற்றவையே!
9. காலந்தோறும் தமிழ், சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிலிருந்தே கடன் பெற்று வளர்ந்துள்ளது.
அதிலிலுள்ள ஐந்நிலம் என்பது உண்மையான நிலப்பாகுபாடன்று. அது நாடகத்தின் சுவையை மிகுவிக்கப் போடும் பின்னணித்திரை போன்றது..
தமிழ் அகம் , புறம் பற்றிய பாடல்கள் அனைத்துமே நாட்டியமாடப் பின்னணியாகப் பாட எழுதப்பட்ட பாடல்களைப் போன்றனவே ஆகும். எதுவும் உண்மையான வாழ்வு நெறியினின்று கிளைத்தது அன்று.
10. பொதுவாக நாம் இன்று சிறப்புடன் போற்றும் தமிழ்சார்ந்த அனைத்துமே,கற்பனைகளே.
இவற்றை உண்மை என நம்பித் தமிழ் உயர்வு பற்றிப் புகழ்தல் எல்லாம் தவறு.
நன்றி:- மூதறிஞர் தமிழண்ணல் எழுதி, திரு இராமசாமி நினைவுப் பல்கலைகழகத்தின் தமிழ்ப் பேராயம் வெளியிட்ட, "தொல்லியல் துறைஞர் இரா. நாகசாமியின், பழுதடைந்த கண்ணாடியும், பார்வைக் கோளாறுகளும்" என்னும் நூலுக்கு, முனைவர் மு.பொன்னவைக்கோ எழுதிய அணிந்துரை.
இப்போது புரிகிறதா? நாகசாமிக்கு அளிக்கப்பட்ட "பத்ம பூசன்" விருது, தமிழுக்கும், தமிழினத்துக்கும் எதிராக விதைக்கப்பட்ட, ஆரிய நச்சுக் கருத்துக்களுக்காக என்பது புரிகிறதா?
பத்மபூஷன் விருதை அளித்து, தமிழுக்கு மாபெரும் துரோகம் செய்த மத்திய பிஜேபி அரசு..
தமிழைச் செம்மொழியாக வளர்த்தது சமஸ்கிருதம்தான் என்றும், இலக்கியம், இலக்கணம், அறம், அரசுச் சட்ட திட்டங்கள் என அனைத்தையும் சமஸ்கிருதத்திடமிருந்துதான் தமிழ் பெற்றது என்றும் தமிழை சிறுமைபடுத்தி, ஆரிய சமஸ்கிருதத்தை சார்த்து தான் தமிழ் உள்ளது என, "தமிழ் சமஸ்கிருதத்தின் கண்ணாடி (Mirror of Tamil and Sanskrit)" நூலில் எழுதிய இரா. நாகசாமி என்னும் ஆரிய சம்ஸ்கிருத, சங்கர மட ஆதரவாளருக்கு பத்மபூஷன் விருதை அளித்துள்ளது மத்திய பிஜேபி மோடி அரசு...
திருக்குறள் சமஸ்கிருத வேதங்களின் காப்பி, தமிழ் மொழி எழுத்து முறையைப் பிராமணர்களிடமிருந்து பெற்றது, தொல் காப்பியம், புறநானூறு, அகநானூறு சிலப்பதிகாரம் முதலியவை சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை, தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலே இல்லை, அசோகர் காலத்தில் தமிழுக்கு எழுத்து வடிவம் இல்லை, செம்மொழிக்கான தகுதிகள் எவை எவை என்று வரையறுக்கப்பட்டுள்ளனவோ அவை யாவும் தமிழுக்கு இல்லை, பழங்குடிகளின் ஒரு கிளைமொழியாக (Dialect) இருந்த தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றுதான் செம்மொழியாக வளர்ந்தது... இப்படியெல்லாம் தமிழை தாழ்த்தி, இழிவுப்படுத்தி தன்னுடைய Mirror of Tamil and Sanskrit நூலில் நாகசாமி எழுதியுள்ளார்.
இப்படியான தமிழ் மொழியின் எதிரிக்கு, இந்தியாவின் உயரிய பத்மபூஷன் விருதை அளித்து மகிழ்ந்துள்ளது மத்திய பிஜேபி மோடி அரசு.

கருத்துகள் இல்லை: