சனி, 12 அக்டோபர், 2019

9 வகுப்பு தலித் மாணவனை ஆதிக்க ஜாதி மாணவன் பிளேட்டால் கீறி... ... மதுரை .அலங்காநல்லூர்

ஏன்டா சக்கிலிய கூதி மகனே நீயெல்லாம் என்னை எதிர்த்து பேசுவியா ?"
இப்படி பேசியது ஏதோ 30, 60 வயது ஆள் இல்லை, வெறும் 14 வயதே நிரம்பிய 9ஆம் வகுப்பு மாணவன்!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேடு அருகே மறவப்பட்டி காலனி சேர்ந்த தலித் மாணவன் சரவணகுமார், பாலமேடு அரசு மேல் நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
11.10.2019 இன்று மாலை சரவணகுமார் உடன் படிக்கும் மாணவன் மோகன்ராஜ் பள்ளி பையை மகா ஈஸ்வரன் என்ற மாணவன் எடுத்து மறைத்து வைத்துக்கொண்டு தேட வைத்துள்ளான்.
இதை சரவணகுமார் மற்றும் மோகன்ராஜ் மேற்படி மகேஸ்வரனிடம் கேட்டுள்ளனர், இதனால் ஆத்திரமடைந்த மகா ஈஸ்வரன் சரவணகுமாரை பார்த்து
"ஏண்டா சக்கிலிய கூதி மகனே நீயெல்லாம் என்னை எதிர்த்து பேசுவியா ?" என்று கூறி டப்பாவில் வைத்திருந்தா பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிழித்துள்ளான்.
தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் என்று பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதியிருந்தும் பள்ளிக்கூடத்தில் இது போன்ற சாதிய வன்முறைகள் நடந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

அந்த மாணவனின் இந்த கொடூரமான செயலுக்கு அவன் மட்டும் காரணமில்லை,
அவன் பிறந்து வளர்ந்த இந்து சாதிய அமைப்பும் அதனை பின்பற்றும் அவனது பெற்றோரும் இந்த சமூகமும் தான் காரணம்.
கல்விக்கூடங்களில் இது போன்ற கொடூரங்கள் நடப்பது மாணவர்களின் எதிர்காலத்துக்குள் இந்த சமூகத்தின் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல.
பாடப்புத்தகங்களின் முதல் பக்கத்தில், தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் என்று இந்த மூன்று வாசகத்தை எழுதினால் மட்டும் போதாது, தீண்டாமை என்றால் என்ன, ஏன் அது கூடாது என்று மாணவர்களுக்கு கற்று தரவேண்டும்.
- Muthupandian Thiruvarangesan.

கருத்துகள் இல்லை: