வெள்ளி, 11 அக்டோபர், 2019

சீன ஊடகங்கள் கூறுவது என்ன.. மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ..

modi xi meeting, PM Modi China president Xi Jinping meet, narendra modi xi jinping meeting, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பு, மாமல்லபுரம், சென்னை, xi meeting at mahabalipuram, mahabalipuram, india china relations, india china on kashmir/tamil.indianexpress.com  :  Modi-Xi meeting tomorrow: சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது முறைசாரா சந்திப்பு அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில்...
Modi-Xi meeting tomorrow: சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது முறைசாரா சந்திப்பு அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மகாபலிபுரத்தில் நடக்க உள்ளதாக சீன ஊடகங்களில் பரவலாகப் செய்தி வெளியாகி உள்ளது. இந்த முறைசாரா உச்சிமாநாட்டிற்கு முன்னர் இருதரப்பையும் மோசமாக பாதித்த சீனாவின் தொடர்ச்சியான வலுவான அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு இடையே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இது முதல் சாதகமான அறிகுறியாக உள்ளது.
காஷ்மீர் தொடர்பாக சனிக்கிழமை பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் கூறிய கருத்துக்கள் தொடர்பாக இந்தியா இராஜதந்திர வழிகளில் சீனாவுக்கு வலுவான எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் குறித்து பெய்ஜிங் கருது நிலைப்பாடு வெளியாவது குறித்து இந்தியா தெளிவுபடுத்த முயன்றது. மேலும், இந்தியா தனது உள் விவகாரங்கள் குறித்து “மற்ற நாடுகளுக்கு கருத்து தெரிவிக்க முடியாது” என்றது.

பெய்ஜிங்கின் தூதர், இரு நாடுகளும், உச்சிமாநாட்டின் போது, “வுஹான் முறைசாரா உச்சிமாநாட்டின் சாதகமான விளைவை அவர்கள் முன்னோக்கிப் பார்க்கும்போது கட்டுப்பாடுகளை விடுவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
சின்ஹுவா செய்தி
“கடந்த ஆண்டு மத்திய சீன நகரமான வுஹானில் ஜீ ஜின்பிங்குக்கும் மோடிக்கும் இடையிலான முதல் முறைசாரா சந்திப்பிலிருந்து, சீனா-இந்தியா உறவுகள் நிலையான வளர்ச்சியுடன் ஒரு புதிய கட்டத்திற்கு நுழைந்துள்ளன. ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்கள் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வேறுபாடுகள் முறையாக நிர்வகிக்கப்படுகின்றன.”
சீன துணை வெளியுறவு அமைச்சர் லூயோ ஜாவோஹுய் கூறுகையில், “ஜீ ஜின்பிங்கின் இந்தியா, நேபாள விஜயம், அண்டை உறவுகளை உறுதிப்படுத்தும், ஒத்துழைப்பு” என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சீனா-இந்தியா ஒத்துழைப்பு இரு நாடுகளின் வளர்ச்சிக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், உலக பன்முகப்படுத்தல் மற்றும் பொருளாதார உலகமயமாக்கலை ஊக்குவிக்கவும், வளரும் நாடுகளின் பொதுவான நலன்களைப் பாதுகாக்கவும் உதவும் என்றும் அவர் கூறினார்.
சவுத் சீனா மார்னிங் போஸ்ட்
ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டத்தைப் பற்றி குறிப்பிடுகையில், ‘இந்தியாவை அடையும்போது சீனா பாகிஸ்தானுக்கு கை நீட்டுகிறது’ என்ற தலைப்பில் ஒரு செய்தி கூறுகிறது. “பாகிஸ்தானுக்கு வலுவான ஆதரவு இருந்தபோதிலும், ஜீ ஜின்பிங் இந்தியாவுடன் எல்லைகளை சரிசெய்யும் பணியில் ஈடுபடுவார். அவர் ஞாயிற்றுக்கிழமை நேபாளத்திற்குச் செல்வதற்கு முன்பு அக்டோபர் 11, 12 தேதிகளில் கடற்கரையோர நகரமான சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் மோடியை சந்திக்கிறார்.” சீன அதிபர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த செய்தி வெளியிடப்பட்டது.
மோடி – ஜீ ஜின்பிங் மகிழ்ச்சியான நட்பு எரிச்சலூட்டுபவர்களால் சோதிக்கப்பட வேண்டும். ஆனால், உலகளாவிய அழுத்தங்கள் இன்னும் இறுக்கமான அரவணைப்பைத் தூண்டக்கூடும் என்ற செய்தியில் “எரிச்சலூட்டும் ஒரு கூட்டம் கூட்டத்தை மூழ்கடிக்க அச்சுறுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த வாரத்தில் இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர மோதல்கள் எழுந்துள்ளன, இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திங்கள்கிழமை இரவு நிலவரப்படி எந்தவொரு நாடும் உச்சிமாநாட்டை முறையாக அறிவிக்கத் தயாராக இல்லை. இருப்பினும் இந்திய அரசு உள்ளூர் பத்திரிகையாளர்களுக்காக பதிவு நடைமுறைகளை ஆரம்பித்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீரைத் தவிர, அருணாச்சல பிரதேசத்தில் பயன்படுத்தப்படாத வான்வழிப் பாதையை முடுக்கிவிட இந்திய விமானப்படையின் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்களை சாயாங் பூங்காவிலிருந்து சீனாவின் இந்திய தூதரகத்திற்கு மாற்றுவது குறித்தும், புதிய பிரச்சினைகள் பற்றிய ஊகங்கள் இந்திய மற்றும் சீன அதிகாரிகளின் சிந்தனைகள் உள்ளன.
“மோடிக்கும் ஜீ ஜின்பிங்குக்கும் இடையிலான மகிழ்ச்சியான நட்பு கடந்த ஆண்டு சந்தித்ததில் இருந்து வெளியானது. பலரும் இதை ‘வுஹான் சக்தி’என்று அழைக்கப்பட்டு பாராட்ட வழிவகுத்தது. இது உறவுகளில் ஒரு புதிய திசையின் அடையாளமாகும் என்று அவர்கள் கூறினர். ஆனால், திங்கள்கிழமை இரவு வரை இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் அறிவிப்பு தொடர்பான மர்மமான மௌனம் நட்பில் முன்னேற ‘வுஹான் சக்தி’ போதுமானதாக இருக்காது.”
‘ஜீ ஜின்பிங் மற்றும் மோடி சந்திக்கும் போது அறையில் மோசமான பிரச்னை’ என்ற தலைப்பில் வெளியான ஒரு தனி கருத்து கட்டுரையில், சீனாவின் உலக வளர்ச்சி யுக்தியின் முன்முயற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு தடையற்ற தடையாகும் என்று கூறியது. இந்த திட்டம் உறவுகளில் ஒரு நெருடலான பிரச்சினையாக உள்ளது என்று அது எழுதியுள்ளது.
பீப்பிள்ஸ் டெய்லி
சென்னையில், ஜீ ஜின்பிங் – மோடி சந்திப்பு ஒரு முறையான நிகழ்ச்சி நிரலை அமைக்காமல், எளிதான, வசதியான சூழ்நிலையில் விவாதங்களை நடத்துவார்கள் என்று பீப்பிள்ஸ் டெய்லி பத்திரிகையின் அறிக்கையில் லூவோ கூறினார். இந்த உச்சிமாநாடு இரு நாடுகளுக்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நீண்டகால செல்வாக்கை உருவாக்குவதற்கும் உதவும்.
சீனா டெய்லி
“பெய்ஜிங் மற்றும் புது டெல்லி ஆகிய இரண்டும் சந்திப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ளன. இரு தலைவர்களும் எந்தவொரு சந்திப்பையும் ஒத்திவைப்பார்கள் என்ற முந்தைய ஊகங்களைத் தகர்த்து, ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டின் வழியில் எதையும் பெற விரும்பவில்லை என்ற உறுதியளிக்கும் செய்தியை அனுப்பியுள்ளனர்” என்று அந்த செய்தி கூறுகிறது.

கருத்துகள் இல்லை: