ஞாயிறு, 21 ஜூலை, 2019

அதிமுக எம் எல் ஏக்களை திமுக இழுக்காது ... ஸ்டாலின் சூசகம் ?

Vivekanadan T : தேனி தொகுதியில் தலைவர் ஸ்டாலின் அவர்களின் பேச்சை கவனித்தேன்....... வெளிப்படையாக பேசியத்திற்கு நன்றி......அதிக வருத்தமும் இருக்கிறது... அவர் சொன்னது:-
"22 சட்டமன்ற தொகுதிகளில் நடத்த தேர்தலில் மெஜோரிட்டி அளவில் வெற்றி அடைந்து ஆட்சியை பிடித்தாலும் நிம்மதியாக திட்டங்களை நிறைவேற்ற முடியாது....சுதந்திரமாக செயல்பட முடியாது....மக்களுக்காக தீர்க்கமாக முடிவெடுக்க முடியாது.....பொது தேர்தல் நடந்து 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெற்றால் தான் நல்லது " என்று ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்..
ஆதலால் , திமுக தலைமை அதிமுக உறுப்பினர்களை இழுக்கும் வேலையை செய்யாது, ஆளும் அதிமுக ஆட்சியை கவிழ்க்காது என்று மறைமுகமாக சொல்லிவிட்டார்.....2021 வரை தமிழக மக்கள் திண்டாடவேண்டும் என்ற முடிவு தெரிந்து விட்டது....

தலைவருக்கு ஒரு கேள்வி , ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வலுக்கட்டாயமாக திணித்து விட்டால், 2021 ஆண்டு நடக்கவேண்டிய தேர்தல் 2024 தள்ளி போகும்....அப்போ என்ன முடிவெடுக்க போகிறீர்கள்..?அதுவரை எங்களை காத்து இருங்கள் என்று சொல்ல போறீங்களா ..?.......தமிழகத்தின் உரிமைகள் பிடுங்கப்பட்டு , சமூக & பொருளாதார பின்னோக்கி செல்லுவதை பார்க்கவேண்டும் என்று சொல்கிறீர்களா..

கருத்துகள் இல்லை: