புதன், 24 ஜூலை, 2019

இம்ரான் கான் : பாகிஸ்தானில் 40 ஆயிரம் தீவிரவாதிகள் உள்ளனர்


தினத்தந்தி : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பாஜ்வா, ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவர் ஃபைஸ் ஹமீது ஆகியோரும் சென்றுள்ளனர். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த ராணுவ நிதியுதவியை அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ள நிலையில், இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.
 இந்த பயணத்தில் அதிபர் டிரம்பை சந்தித்து அவர் பேசினார். இதன்பின் அவர் அமெரிக்காவின் இன்ஸ்டியூட் ஆப் பீஸ் என்ற அமைப்பில் உரையாற்றும்பொழுது, தனது பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் அரசு அதிகாரத்திற்கு வருவதற்கு முன் இருந்த அரசு, நாட்டில் இயங்கி வந்த தீவிரவாத குழுக்களை சரணடைய செய்ய அரசியல் தைரியம் இல்லாமல் இருந்தனர்.

ஏனெனில், தீவிரவாத குழுக்களை பற்றி எப்பொழுது பேசினாலும், நாட்டில் 40 ஆயிரம் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இருந்து கொண்டு, பயிற்சி பெற்று ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீரின் சில பகுதிகளில் சண்டையிட்ட நிலையில் இருந்து வந்தனர்.
கடந்த 2014ம் ஆண்டு நாட்டிலுள்ள ராணுவ பள்ளி மீது தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 150 பள்ளி மாணவ மாணவியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும், பாகிஸ்தானில் எந்தவொரு தீவிரவாத குழுவும் இயங்க அனுமதிக்க போவதில்லை என தேசிய அதிரடி திட்டத்தில் கையெழுத்திட்டனர் என கூறியுள்ளார்.
இதன்படி, தீவிரவாத குழுக்களை ஒழிக்கும் முதல் அரசாக எங்களது அரசு உள்ளது என பேசினார். அவர் மற்றொரு நிகழ்ச்சியில் பேசும்பொழுது, நாட்டின் எல்லை பகுதிகளில் 40 வெவ்வேறு தீவிரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன என கூறினார்

கருத்துகள் இல்லை: