சனி, 27 ஜூலை, 2019

அப்துல் கலாம் அய்யா.. சமுகவலையில் வெடித்து கிளம்பும் விமர்சனங்கள்

Chozha Rajan : இமயமலையில் தயானந்த சரஸ்வதியை சந்தித்ததாக அப்துல்கலாம் கூறியிருக்கிறார்...
அதன்பின்னர்தான் அவருக்கு இந்திய விண்வெளித்துறை ஆராய்ச்சிக்கூடத்தில் வேலை கிடைத்திருக்கிறது..
காங்கிரஸ் ஆட்சியில் முடிக்கப்பட்டு, ஐக்கியமுன்னணி ஆட்சியிலும் வெடிக்கப்படாமல் பாதுகாத்த அணுகுண்டு குறித்து வாஜ்பாயிடம் கூறி, அதை வெடிக்கச் செய்து வாஜ்பாய்க்கு பேர் கிடைக்கச் செய்த புண்ணியம் கலாமுக்கு உண்டு...
ஆனால் பாகிஸ்தான் பதிலுக்கு வெடித்து இந்தியாவுக்கு இணையாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் கலாமின் அவசரபுத்திதான் வழங்கியது...
சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பொருளாதார இழப்புக்கும் அதுவே காரணமாகியது.
அணுகுண்டு ரகசியத்தை சொல்லி தனக்கு பேர் பெற்றுக்கொடுத்த காரியத்துக்காகவே அவருக்கு குடியரசுத்தலைவர் பதவியை பாஜக கொடுத்தது என்பது ஊரறிந்த ரகசியம்...
குஜராத் கலவரத்தை திசைதிருப்பவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்ற விமர்சனத்தையும் கண்களை அகலத் திறந்து ரசித்துக்கொண்டிருந்தவர்தான் கலாம்...
பிப்ரவரி மார்ச்சில் கலவவரம் நடக்கிறது....
ஜூலையில் இவர் குடியரசுத்தலைவராகிறார்...

தான் ஒரு தொழில்நுட்ப பட்டதாரி மட்டுமே என்பதை அறிந்திருந்தும், விஞ்ஞானி என்று குறிப்பிடப்படுவதை தடுக்க முனையாத போலி விஞ்ஞானி...

Sivakumar S : அடக்கம் என்பது ஒருவரை வாழ்வில் எவ்வளவு உயரத்திற்கு கொண்டு சொல்லும் என்பது ஐயா அவர்களை மிகச்சிறந்த உதாரணமாக சொல்லலாம். இன்று இஸ்லாமியர்களை ஜெய்ஸ்ரீராம் சொல்ல கட்ட்டாயப்படுத்தி அடிக்கின்ற போதும்
பல இஸ்லாமியர்கள் சொல்லமாட்டேன் என மதவெறியுடன் இருக்கும் நிலையும்
இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ஒரு அடி கூட வாங்காமல்
தானே முன் வந்து ஜெய்ஸ்ரீராம் சொன்னவர்.
வேதங்களை,இதிகாசங்களை கற்று தேர்ந்தவர்.பிராமண குருமார்களிடம் குழந்தையாய் மாறி தரையில் அமர்ந்து மரியாதை செலுத்தவும் ஐயா அவர்கள் தவறியத்தில்லை.
இத்தகைய அடக்க குணங்களே ஐயா அவர்கள் இன்று பார் போற்றும் விஞ்ஞானியாக திகழ காரணம் என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..
Devi Somasundaram : அப்துல் கலாம் மக்களுக்கு செய்த சேவை என்ன ? . சீரியஸா பதில் சொல்ங்க . அவர் ரெண்டே சட்டை வச்சு இருந்தார்னு வராதா ...ஒழுங்கா உழைச்சு சம்பாதிச்சு அவர் 50 சட்டை கூட வச்சுக்கட்டும் .. அவர் உழைப்பை பாராட்ட்லாம்... அவர் மக்களுக்கு என்ன செய்தார் .? .. ரெண்டே சட்டை வச்சு இருப்பது அவர் சேவை செய்ததுக்கு அடையாளம் இல்லை.. ராக்கெட் விட்டார்ன்னு வராத....அது அவர் தொழில் ..சேவை இல்லை...

radha manohar :பாஜகவுக்கு மிக பெரிய சேவை செய்தார் . இந்து டெர்ரரிஸ்ட் என்ற பெயரை இந்தியாவிலும் உலக அளவிலும் போக்குததற்கு பாஜகவுக்கு ஒரு இஸ்லாமிய முகம் தேவைப்பட்டது .. அதை அப்துல் கலாம் வழங்கினார் . குஜராத்தில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களின் உறவினர்களிடம் இது பற்றி கேட்கவேண்டும் .. ஆனால் அவர்கள் பயத்தினால் வாய் திறக்க மாட்டார்கள் .. இதுவெல்லாம் ஒரு பிழைப்பு

கருத்துகள் இல்லை: