திங்கள், 27 மே, 2019

கேரளத்தின் இடதுசாரிகளின் தோல்வி ஏன்?

Nj Subash : கேரளத்தின் இடதுசாரிகளின் தோல்வி ஏன்? பாகம் 3
சபரிமலை விவகாரம்.
இதில் இடசாரிகள் ஒரு நிலைப்பாடும், காங்கிரஸ் கூட்டணி மற்றொரு நிலைப்பாடும் எடுத்தது.
இதில் காங்கிரஸ் நிலைப்பாடு வெற்றிஅடைய காரணம். கேரளம் இன்னும் கடவுளின் தேசம். பொதுவுடமை தேசம் அல்ல. இன்றும் கூட கோயில் பூசை சாமான்களை வாங்குவதில் தீட்டு கடைபிடிக்கப்படுகிறது. நம்பூதிரிகளால்( கோயில் அர்ச்சனை பொருள்களை
கையால் வாங்காமல் நடை படிக்கட்டில் வைக்கப்பட்டு அதனை நம்பூதிரி எடுத்து அர்ச்சனை முடிந்து அர்ச்சனை பொருள் 1ஜான் அளவிற்கு நம்பூதிரி கை மேலே இருந்து போடப்படும். அதை நாம் வாங்க வேண்டும். இதற்கு நானே சாட்சி) இப்படி தீட்டு கடைபிடிக்கப்படும் மாநிலத்தில் சபரிமலை பெண்கள் விகாரம் பெரும் பிரச்சனையாக மாறியது.
நாயர் சமுகம் இதனை மிக கடுமையாக எதிர்த்தது. மேலும் மாநில மக்கள் தொகையில் குறிப்பிட்ட ஓட்டு வங்கி உள்ள நாயர் மற்றும் அதன் உட்பிரிவு சமூகங்கள் தேர்தலில் தங்கள் பங்கை காட்டின. இவர்களால் Bjp யைமுழுமையாக ஆதரிக்காவிட்டாலும் காங்கிரஸை ஆதரித்தனர்
சபரிமலை வர்த்தகம் - 3மாதங்கள் அமோகமாக நடைபெறும். ஆனால் இப்பிரச்சனையில் 144 உத்தரவு வர்த்தகத்தை பாதித்தது. வர்த்தகத்தில் இந்துகளுடன் கிருத்துவர்களும் பாதித்தனர்.
ரஹானா போன்ற மூட்டாள் பெண்அறிவுஜீவிகளை சந்நிதானம் கொண்டுவந்தது அடுத்த தவறு.
தேவசம் போர்டும் -அரசும் மாறி மாறி நிலைப்பாடு எடுத்தது.

இன்றும் மற்ற மதத்தவர்கோயில்க்கு வர தடை( ஷேத்திரம் - கோயில்)உள்ள மாநிலம் எப்படி பெண்களை அனுமதிக்கும்?
எல்லாவற்றிக்கும் மேல் பந்தளம் ராஜா மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்துடன் கடும் மோதல்.
இப்படி திரும்பிய பக்கமெல்லாம் சண்டை என்றால் எப்படி? இது காங்கிரஸ் +Bjp க்கு வலுக்கூட்டியது.
முஸ்லீம் லீக்கும் + கேரள காங்கிரஸ் M கூட அரசிற்கு எதிர்நிலை எடுத்தது.

கருத்துகள் இல்லை: