செவ்வாய், 28 மே, 2019

ராகுல் ஒரு நல்ல மனிதர்... எதிரி முற்றிலும் நேர்மை அற்றவன்..

Swathi K : இன்று அல்லது நாளை தெரிந்துவிடும் ராகுல் காங்கிரஸ் கட்சி தலைவராக இருப்பாரா மாட்டாரா என்று..
ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினால் நல்லதா??
அவருக்கு நல்லது.. காங்கிரஸ்கோ, நாட்டுக்கோ நல்லதில்லை.. காங்கிரஸ் தொண்டர்களால் அவ்வளவு எளிதில் மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது.. வேறு தலைவர்கள் வந்தால் கட்சி உடையவே வாய்ப்பிருக்கிறது..
நமக்கு பிடித்தோ.. பிடிக்காமலோ.. தேசிய அளவில் இப்போது இருக்கும் கட்சிகள் இரண்டு மட்டுமே ஒன்று பிஜேபி, இன்னொன்று காங்கிரஸ்..
இந்த நாட்டை ஏதோ ஒரு காலத்தில் மோடி, அமித்ஷா'விடம் இருந்து மீட்க முடியும் என்றால் அது ராகுலால் மட்டுமே முடியும்.. பக்கத்தில் யாருமே கிடையாது.. பால்கோட் தாக்குதலுக்கு முன் வரை மோடியின் ரேட்டிங் 43% ராகுல் ரேட்டிங் 39%.. Modi rating was all time low with 43% in Jan.. & Rahul rating was all time high with 39% in Jan.. எல்லாமே பால்கோட் தாக்குதலுக்கு பின் மாற ஆரம்பித்தது தான்.. + தேர்தல் கோல்மால் + தேர்தல் ஆணையம் பாரபட்சம், etc..
இன்னொரு தலைவரை அடையாளம் கண்டு மறுபடி மோடிக்கு எதிராக அவரை பிரதமர் வேட்பாளாராக மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல.. யாரை கொண்டுவந்தாலும் பிஜேபி அவர்களின் இமேஜை உடைப்பார்கள்.. (Character Assassination)..

BJP is good in Character Assassination of good people.. நல்ல மனிதர்களின் இமேஜை தவறான செய்திகள் மூலம் மீடியா உதவியுடன் உடைப்பது தான் பிஜேபி வெற்றிகரமாக கடந்த 10 வருடமாக செய்து வருவது.. மன்மோகன் என்ற நல்ல மனிதரை இப்படி தான் உடைத்தார்கள்.. கடந்த 7-8 வருடமாக ராகுல் வளர்ந்து தலைவராக உருவாகிட கூடாது என்று ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்து ராகுலை பப்பு, திறமை அற்றவர் என்று விளம்பரம் செய்ய வைத்தார்கள்.. பொதுமக்கள் புத்தியில் ராகுலை பற்றிய தவறான பார்வையை விதைத்தார்கள்.. அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றார்கள்.. விவரம் அறிந்த எல்லோருக்கும் தெரியும் மோடி தான் பப்பு.. ராகுல் விவரம் அறிந்த நல்ல மனிதர் என்று..
ராகுல் காங்கிரஸ் தலைமை ஏற்றது டிசம்பர் 2017ல் தான்.. அதற்கு பின் தான் காங்கிரஸ் தொண்டர்களுக்கு காங்கிரஸ் கட்சி மேல் நம்பிக்கை வர ஆரம்பித்தது.. வெற்றிகள் குவிய ஆரம்பித்தது.. பாராளுமன்ற தோல்வி யாருமே எதிர்பார்க்காத ஒன்று.. EVM கோல்மால் இருக்கலாம்.. இல்லை உண்மையில் பாகிஸ்தான், முஸ்லீம் எதிரி, ஹிந்துத்துவா என்ற மோடியின் போலி பிரச்சாரத்திற்கு வட மாநில முட்டாள்கள் பலி ஆகி இருக்கலாம்..
உண்மையை சொல்லுங்கள்.. தேர்தல் முடிவு வரும்வரை ராகுலை பற்றியோ.. அவரது பிரச்சாரம் பற்றியோ.. (ஆம்ஆத்மீ கூட்டணி பற்றிய விமர்சனம் மட்டும் இருந்தது..) பெரிய அளவில் யாருமே விமர்சனம் செய்யவில்லை.. எல்லாமே சரியாக சென்றுகொண்டு இருக்கிறது என்று தான் அனைத்து மீடியாவும் கூறியது.. முடிவு இப்படி வரும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.. பிஜேபி தொண்டர்கள் கூட.. முடிவு காங்கிரஸ்க்கு பாதகமாக வந்ததும் எல்லோரும் பல்டி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்..
தேர்தலில் தோல்வி கண்டவுடன் ராகுல் இப்படி செய்து இருக்கலாம்.. அப்படி செய்து இருக்கலாம் என்று கருத்து கூறுவது எளிது.. எதிர்க்கட்சிகள் (திமுக தவிர) எல்லாமே படுகேவலமாக தான் தோற்று இருக்கிறார்கள்.. ராகுல் பதவி விலக வேண்டும் என்றால் எல்லா கட்சி தலைவர்களும் பதவி விலகவேண்டும்..
ராகுலின் பிம்பத்தை எப்படி கோடிகளில் செலவு செய்து பிஜேபி உடைக்கிறதோ.. காங்கிரஸ்க்கு யார் தலைவராக வந்தாலும் உடைப்பார்கள்.. BJP is good in Character Assassination of good people.. அதை தாண்டி அரசியல் செய்யவேண்டும் இங்கு..
எல்லாமே சரியாக தான் செய்தார் ராகுல்.. ஆனால் பாவம் நல்லவராக இருந்து விட்டார்.. அது மட்டும் தான் அவர் செய்த தவறு.. இனி ராகுல் செய்யவேண்டியது..
1. பிஜேபிக்கு அமிட்ஷா போல ஒருவரை ராகுல் தனது வலது கரமாக அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் (DK சிவகுமார்??).. வெளியில் ராகுலுக்கான soft இமேஜ் உருவாக்கிகொண்டு இருந்தாலும்.. திட்டங்கள், அதை செயல்படுத்துவதில் நன்றாக அரசியல் கிரிமினல்தனம் தெரிந்த ஒருவரின் அறிவுரை படி செயல்படுத்த வேண்டும்.. நேர்மை, நீதி எல்லாம் தாண்டி அரசியலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற மனநிலைக்கு மாறவேண்டும்..
2. ராகுலின் இமேஷை பிஜேபி ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்து உடைப்பது போல.. மோடியின் போலியான முகத்தை உடைக்கவேண்டும்.. வாட்சப், முகநூலில் நிறைய sleeper cell அமைப்புகளை ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழிகளில் ஆரம்பித்து மோடியின் பிம்பத்தை உடைக்கவேண்டும்.. இப்படி உடைக்கும் அதே நேரம் காங்கிரஸ், ராகுலின் இமேஜை உயர்த்த நாடு முழுவதும் PR, எழுத்தாளர்கள் என்று ஒரு அமைப்பை கட்டமைக்க வேண்டும்..
3. மாநில அளவில், தேசிய அளவில் சில முக்கிய தொலைக்காட்சிகள், பத்திரிகைகளை கைப்பற்ற வேண்டும்.. முடியவில்லையா அவர்களே நடுநிலை போல சில தொலைக்காட்சி சேனல், பத்திரிக்கைகள் ஆரம்பித்து மோடியின் முகமூடியை கொஞ்சம் கொஞ்சமாக கிழிக்க வேண்டும்..
4. அதானி, அம்பானிக்கு எதிரிகளான சில கார்போரேட் முதலைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றுவது.. முழுவதும் கார்போரேட்டை பகைத்துக்கொண்டு அரசியல் செய்வது கடினம்.. அதற்கு பதிலாக கார்போரேட்டை தங்களுக்கு சாதகமாக மாற்றுவது.. தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் இதை..
5. RSS அமைப்பை பிடிக்காத நிறைய இந்து மத அமைப்புகளை ஒருங்கிணைத்து தங்களுக்கு சாதகமாக மாற்றவேண்டும்.. எப்படி பிஜேபி பிளவு அரசியல் செய்கிறதோ.. அதையே இவர்களும் பெரும்பான்மை இன மக்களிடம் செய்யவேண்டும்..
6. ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான தலைமை.. மாநில அளவில் மாநில தலைமை எடுக்கும் முடிவுக்கு முழு உரிமை கொடுக்கவேண்டும்..
7. காங்கிரஸ் விட்டு சென்ற YSR போன்ற கட்சிகளுடன் நெருக்கமாக இருக்கவேண்டும்... தேர்தலில் சரியான கூட்டணி..
8. பிரச்சனைகளுக்கு தெருவில் இறங்கி போராடுவது.. வெறும் கண்டன அறிக்கை மட்டும் விடாமல் தெருவில் இறங்கி போராடி மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும்..
9. காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும்.. இல்லையென்றால் அவை எல்லாமே மோடி சாதனைகள் ஆகிவிடும் இன்னும் சில வருடங்களில்..
10. ஒவ்வொரு பூத்'க்கும் தொண்டர்களின் எண்ணிக்கையை கூட்டுவது.. அவர்களுக்கு தனியாக முகநூல், வாட்சப்.. அதற்கு தேவையான செய்திகள் என்று அடிப்படை கட்டமைப்பை மாற்றவேண்டும்..
11. பிரியங்காவை முழு நேர அரசியலுக்கு கொண்டுவருவது..
12. மறுபடி காந்திய சித்தாந்தங்களை மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும்.. நாட்டின் சிறந்த எழுத்தாளர்களை பிடியுங்கள்.. காசு கொடுத்து கூட எழுத வையுங்கள்.. ஏதாவது செய்யுங்கள்.. ஆனால் காந்திய, நேரு சிந்தனைகளை மக்களுக்கு கொண்டுசெல்லுங்கள் (தமிழகத்தில் நிறைய பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் வைத்து திமுக பெரியார் சிந்தனைகளை கொண்டு செல்வது போல)
13. EVM கோல்மால் இனி வரும் எல்லா தேர்தலிலும் நடக்க வாய்ப்புகள் அதிகம்.. பழைய வாக்குசீட்டு முறைக்கு மாறுவதற்கு மக்களையும் சேர்த்து போராடுங்கள்.. தேர்தல் வரை பொறுமையாக இருக்காதீர்கள்..
இன்னும் நிறைய இருக்கிறது.. ஆனால் எல்லாமே முடியும்..
ராகுலின் பிம்பத்தை மேலும் மேலும் ஆயிரக்கணக்கான கோடிகளில் செலவு செய்து பிஜேபி உடைப்பார்கள்.. காங்கிரஸ்க்கு யார் தலைவராக வந்தாலும் உடைப்பார்கள்.. BJP is good in Character Assassination of good people.. இதையெல்லாம் தாண்டி தான் அரசியல் செய்யவேண்டும்..
நமது எதிரி முற்றிலும் நேர்மை அற்றவன்.. அவனிடன் நேர்மையாக போராடினால் வெற்றி பெறுவது கடினம்.. ராகுல் ஒரு நல்ல மனிதர்.. அதில் இருந்து பக்கா அரசியல்வாதியாக மாற வேண்டிய நேரமிது..

கருத்துகள் இல்லை: