சனி, 14 ஜூலை, 2018

சீமான் குருமூர்த்தியின் கட்டுப்பாட்டில் இயங்குகிறாரா?

Murugan Kanna : "நாம் தமிழர் இயக்கம்" என்று இந்த
இயக்கத்தை தொடங்கியது யார்? என்று
கேட்டால் சி.பா.ஆதித்தனார் என்று அரசியல் தெரிந்தவர்கள் உடனே சொல்லி விடுவார்கள்...
சி.பா.ஆதித்தனார் தொடங்கிய ஒரு இயக்கத்தை சீமான் எனும் ஒரு சாதாரண சினிமாவில் நடிக்கும் நபருக்கு யாராவது தருவார்களா?.
அப்படி கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு சிபாரிசின் பின்னணி எவ்வளவு கனமாக இருக்க வேண்டும்!!.?.
தினத்தந்தியின் ஆடிட்டர் S.குருமூர்த்தி.
கையெழுத்து போடுபவர் வேறாக இருந்தாலும் நம்ம தலை இல்லாமல் தமிழகத்தில் அணு கூட அசையாது.
தமிழில் நன்றாக தேர்ச்சி பெற்று அதை வளர்க்க தகுதியான ஒரு சிறந்த நபர் இருக்கிறார். அவருக்கு இந்த பெயரை எனக்காக நீங்கள் தர வேண்டும் என்று ஒப்புதல் வாங்குகிறார் S.G.
சீமானை இயக்கமாக தொடங்க வைத்து விசுவாசத்துக்கு பின்னர் கட்சியாக மாற்றுகிறார்.சீமான் திருமணத்திற்கு தினத்தந்தி டிரஸ்ட் செலவு செய்த தொகை மட்டும் ரூ40 லட்சம். மற்றவை தனி.
எதற்காக சொல்கிறேன் என்றால் பிரதமருக்கு எதிராக பேசு என்றால் பேசுவார்.
பெரியாரை புகழ் என்றால் புகழ்வார்.திட்டு என்றால் திட்டுவார்.
விடுதலை புலிகளை பற்றி பேசு என்பார்.பேசுவார். இயற்கையை பற்றி பேசு என்பார். பேசுவார்.

வருமானம் இல்லாத சினிமாவில் உள்ளவர்களை, சாராய சிண்டிகேட் லாபிக்கு தேவையானவர்களை தமிழகத்திற்கு படைக்கும் கலியுக பிரம்மாவே குருமூர்த்தி.
மோடியை தமிழகத்தில் டார்கெட் செய்வதே S.G.
இது போல பல ஆட்கள் பலரை வைத்து உள்ளார் என்றால் அது மிகை அல்ல.யார் யாரை எப்படி வசியம் செய்வார் என்பது நீங்கள் முற்றிலும் அறியாத மாறுபட்ட கலை.
அதை பின்னர் காண்போம்.
இப்படிப்பட்ட S.G. இப்போது சங்கர மடத்தின் அதிகார டிரஸ்டி ஆகி விட்டார்.
இது போன்ற பல செயல்களை பிரதமர் அலுவலகத்திற்கு உளவுத் துறையை அனுப்ப விடாமல் பார்ப்பதும் நம்ம S.G.
உளவுத் துறை,NSA தமிழகத்தை உற்று நோக்க வேண்டிய காலம்.
ஆடிட்டர் கையில்தான் எல்லா பத்திரிக்கை,டிவிகளின் கணக்கு வழக்கு.
நான் சொல்லும் இச்செய்திகளை இந்த துறைகள் ஆய்வு செய்து இனியாவது கொண்டு சேர்க்குமா?.
நாம் பொறுத்திருந்து காண்போம்.
வில்லை பற்றிய செய்திகளை முதலில் அனுப்புங்கள்.தமிழகம் அமைதியாகும்.
பதிவு : பாலசுப்பிமணியன் ஆதித்தியன்

கருத்துகள் இல்லை: