ஞாயிறு, 10 ஜூன், 2018

சத்துணவு திட்டம் உருவான கதை ... நாகநாதன் உதவியோடு கலைஞர் உருவாக்கிய திட்டம் எம்ஜியார் அமுல்படுத்தினார்

Muralidharan Pb : உண்மை என்னன்னா...  1980களின் ஆரம்பத்தில்
இந்தியாவில் ஒரு மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் தோற்றுவிட்டு, சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வென்று அரியணையில் அமர்ந்த ஒரு மாநில முதல்வர், தன்னை வெற்றி பெற வைத்த மக்களுக்கு ஏதாவது நலதிட்டம் செய்ய நினைத்து, இருக்கிற ஒரு திட்டத்தை சிறிது மெறுகேற்றி அறிவிப்பை மேலவையில் அறிவிக்கிறார்.
அந்த மேலவையில் எதிர்கட்சி தலைவர் அந்த திட்டத்தை பற்றி நிறைய விவரங்களை தன் கீழ் வேலை பார்த்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் துணைக் கொண்டு தயாரித்து இப்படித்தான் இந்த திட்டம் இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.
முதல்வரும் அந்த ஒன்றரை மணிநேர இடைவிடாத பேச்சினை கூர்ந்து கவனிக்கிறார். இருந்தும் அவர் பேசியதை பொறுமையாக கேட்கிறார். ஏனெனில் அந்த எதிர் கட்சி தலைவர் தான் அவரையே அரசியலுக்கு அழைத்து வந்தவர். அவரின் நீண்ட உரையில் தெளிவும், நியாயமும் இருப்பதை உணர்ந்த முதல்வர் அசராமல் அடுத்தவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் கேட்டுக்கொண்டிருந்தார்.

இறுதியில் முதல்வர் அந்த தலைவர் குறித்து வைத்திருந்த கோப்பை அவரிடம் இருந்து பெற்றுக் கொள்ள அதுதான் திட்டமாக உருவானது. அந்த திட்டம் தான் சத்துணவு திட்டம். முதல்வர் எம்ஜிஆருக்கு திறம்பட எடுத்துரைத்த அந்த மேலவை தலைவர் வேறு யாருமல்ல கலைஞர் கருணாநிதி. அவருக்கு அந்த சத்துணவு பற்றிய விவரங்களை தந்த பேராசிரியர் நாகநாதன்.
சத்துணவு கொடுத்தவர் எம்ஜிஆர், அதை அவருக்கு வடிவமைத்து வழிகொடுத்தவர்கள் கலைஞர் மற்றும் ஐயா நாகநாதன்.

கருத்துகள் இல்லை: