புதன், 3 ஜனவரி, 2018

எச்.ராஜா பயம் காட்டுகிறார் தினகரனுக்கு நாளை டைம் பாம் வெடிக்கும்

வெப்துனியா :தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அபார வெற்றிபெற்றார். அவரது வெற்றிக்கு பின்னர் அரசியல் களத்தில் தினகரன் முக்கிய நபராக பார்க்கப்படுகிறார்.
தினகரனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் அதிக வாக்குகள் பின்தங்கி தோல்வியை தழுவினார். இருப்பினும் அவருக்கு மட்டுமே டெப்பாசிட் தொகை கிடைத்தது. திமுக உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெப்பாசிட்டை இழந்தினர். தேசிய கட்சியான பாஜக நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்று படுதோல்வியடைந்தது.

இதனையடுத்து தினகரனின் வெற்றி ஜனநாயகத்துக்கு எதிரானது எனவும், அது பணம் கொடுத்து பெறப்பட்ட வெற்றி எனவும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினகரனின் வெற்றி செல்லுமா என்பது கூட சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

;கடந்த 29-ஆம் தேதி எம்எல்ஏவாக சபாநாயகர் அறையில் பதவியேற்றுக்கொண்ட தினகரன் தனது முதல் சட்டசபை கூட்டத்தில் வரும் 8-ஆம் தேதி கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தினகரனின் வெற்றி குறித்து சூசகமாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தினகரனின் வெற்றி எரிநட்சத்திரம் போன்றது. ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்றது தொடர்பாக நாளை இரவுக்குள் டைம்பாம் வெடிக்கலாம் என சூசகமாக எச்.ராஜா கூறியுள்ளது அரசியல் வட்டாராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: