ஞாயிறு, 31 டிசம்பர், 2017

வீரமணி :அரசிலையும், ஆன்மிகத்தையும் சம்மந்தப்படுத்தக் கூடாது...

அரசியல்+ ஆன்மீகம் = குழப்பம்!ஆன்மீக அரசியல் என்று ரஜினிகாந்த் சொல்வது அவரது குழப்பத்தை எடுத்துக் காட்டுகிறது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்திருக்கிறார்; மேலும் அவர் ஆன்மிக அரசியலில் ஈடுபடுவதாகவும் சொல்லியிருக்கிறார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி,
’’எந்த ஓர்அமைப்பும், யாரும் அரசியலுக்கு வரலாம்; அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், அதே நேரத்தில், அவர்கள் அரசியலுக்கு வந்து கட்சியைத் தொடங் கும்போது, அந்தக் கட்சிக்கு என்ன கொள்கை? என்ன செயல் முறை? எதை நோக்கி அவர் பயணம் செய்கிறார்? என்பதைப் பொறுத்துத்தான் அந்தக் கட்சிக்கு மக்களுடைய வரவேற்போ, எதிர்ப்போ இருக்கும்.
எங்களைப் போன்றவர்கள், அரசியலில் மிகப்பெரிய அளவிற்கு வரக்கூடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும், சமூகநீதியையும், பகுத்தறிவு அடிப்படையில், பெண்ணடிமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பை மய்யப்படுத்துவதாக இருந்தால், நிச்சயமாக அதனை வரவேற்கக்கூடிய நிலையில், தெளிவாக கருத்துகளைக் கூறுவோம்.
அதேநேரத்தில், ஆன்மிக அரசியல் என்று அவர்கள் சொல்வது இருக்கிறதே,

கருத்துகள் இல்லை: