ஞாயிறு, 31 டிசம்பர், 2017

வேலு நாச்சியாரும் வள்ளுவருக்கு பூணூல் போட்ட வேணுகோபால் வாரிசுகளும்?


Karuppu Neelakandan : வேலுநாச்சியாரை 'ஷோ'காட்டி விளம்பர பிழைப்பை பெருக்கிக்கொண்டேயிருக்கும் ஶ்ரீராம்சர்மா யாருன்னா.... 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்' என்ற நம் சமூகத்தின் மகாகவி வள்ளுவனுக்கு பூணூல் மாட்டிவிட்ட வேணுகோபால் சர்மாங்குற பார்ப்பனரின் புதல்வராம்....
இது நாச்சியாரை ஆத்துக்கு அழைச்சிண்டு போயி மாமியாக்கும் யத்தனமா.....
பார்ப்பனர்- முக்குலத்தோர் அரசியல்/அதிகார உறவை பலப்படுத்தும் கலைவளர்ச்சியா?
'நம்மாளப் பத்திய நாடகம்' என நாடகத்தை விதந்து திரியும் 'ஜாதிய மொக்கை'களை தாண்டி அரசியல் பூர்வமாக நாடகத்தை கண்டுணர்ந்து எழுதப்பட்ட விமர்சனங்கள் ஏதேனும் உண்டா ?
ஜாதியொழிப்பில் நம்பிக்கையுள்ள நண்பர்கள் உரைத்தால் கேட்டுக்கொள்கிறேன்.
 Govindarajan Vijaya Padma :சரியாக சொன்னீர்கள் . கிட்ட தட்ட இருபது வருடமாக ஷர்மாவை எனக்கு தெரியும் .பல பக்தி பாடல்களை எழுதியவர் அவர் . அப்பா முதன் முதலாக வரைந்த பூணுல் திருவள்ளுவரை வெளிநாட்டிற்கு விற்று காசாக்க இன்றுவரை துடித்துக் கொண்டு இருப்பவர். அவர் வேலு நாச்சியாரை வைத்து மடக்கி வைத்து இருக்கும் ஏமாந்த சோணகிரி வைகோ . அவர்தான் இவருக்கு பொருளுதவி .

கருத்துகள் இல்லை: