வியாழன், 20 ஜூலை, 2017

நீட் தேர்வினால் வாய்ப்பை இழந்த கூலிதொழிலாளர் மகன் ... மாநில அளவில் சாதனை படைத்தவர்!

:நீட்_தேர்வை_எதிர்ப்போம் ! சேலம் மாவட்டம் இடங்கணசாலை பேரூரராட்சியில் தறி நெசவு செய்யும் கூலி தொழிலாளிகள் வடிவேல்- பெருமாயி ஆகியோரின் மகன் தான் தம்பி. ரஜினிரகு என்ற மாணவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தவர்.
தற்போது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1190 மதிப்பெண்கள் பெற்றவர். மருத்துவ படிப்பிற்கான கட் ஆப் 199.5 பெற்றிருந்தும் நீட் நுழைவு தேர்வினால் மருத்துவராகும் வாய்ப்பினை இழந்தார். நீட் நுழைவு தேர்வு இல்லையெனில் நிச்சயம் மருத்துவ படிப்பு பயில இடம் கிடைத்து 5 ஆண்டுகளில் மருத்துவராகி தனது பெற்றோரின் சிரமத்தினை நீக்கி குடும்பநிலையை உயர்த்தியிருப்பார்.

ஆனால் தறி தொழிலாளியின் மகன் மருத்துவராக கூடாது என்பதை மறைமுகமாக எடுத்துரைக்கும் வகையில் சமூகநீதிக்கு எதிரான வருணாசிரம அதர்மத்தை புகுத்திடும் வகையில் நீட் தேர்வினை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனை எதிர்க்க வேண்டிய மாணவர்களை காக்க வேண்டிய தமிழக அரசு கை கட்டி ஆட்சியை பாதுகாக்க மாணவர்களை ஏமாற்றுகிறது.
மாநில கல்வி முறையில் கற்றவர்களுக்கு திடீரென தேசிய கல்வி திட்டத்திலிருந்து கேள்வி கேட்டால் எப்படி பதில் வரும் அதற்கு ஏன் மாநில கல்வியை குறை சொல்லவேண்டும்  AdmkFailss

கருத்துகள் இல்லை: