வியாழன், 2 மார்ச், 2017

தனுஷின் பூர்வீகம் அறிய டி என் ஏ பரிசோதனை!


தனுஷ் தங்களது மகன் என்று உரிமை கொண்டாடிவரும் கதிரேசன் மீனாட்சி தம்பதியினரின் வழக்கு விசாரணை கடந்த செவ்வாய் கிழமை மதுரை மேலூரிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் நடைபெற்றது.
கதிரேசன் தம்பதியினர் சமர்ப்பித்த பள்ளி மாற்று சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷிடம் இல்லை. தனுஷ் சமர்ப்பித்த பிறப்புச் சான்றிதழில், எந்த அடையாளங்களும் குறிப்பிடப்படாதது, அதில் தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜா ஆகியோரின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது ஆகிய ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றதை தனுஷின் குளறுபடி ஆதாரங்கள்: நாளை தீர்ப்பு என்னாகும்? என்ற தலைப்பில் நமது மின்னம்பலத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

வலுவான ஆதாரங்கள் இல்லாததால் கதிரேசன் தம்பதியினர் யாரிடமோ பணம் பெற்று இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர் என்று தனுஷ் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என நிரூபிக்க டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோரி மேலூரைச் சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: