புதன், 1 மார்ச், 2017

எம்.எல்.ஏ.,க்கள் சொகுசு பங்களா .. 1 கோடி ரூபாய்! தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் அரசு பணம் தியாகம்?


ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் தங்களது தொகுதிகளில் சொகுசு பங்களா கட்டிக்கொள்ள தெலுங்கானா அரசு தலா ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவின் பல நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியபோதும், அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அவர் மக்கள் வரிப்பணத்தில் கோயில்களுக்கு வேண்டுதலை நிறைவேற்ற தங்கம் மற்றும் வைர நகைகளை காணிக்கையாக செலுத்தினார். சில மாதங்களுக்கு முன்னர் எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தினார். இதன்பின்னர் அவர் ரூ.50 கோடி செலவில் கட்டப்பட்ட ஆடம்பர பங்களாவுக்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில், இன்று ஐதராபாத் நகரில், ரூ.100 கோடி செலவில் எம்.எல்.ஏ., குடியிருப்புக்களை கட்ட பணம் ஒதுக்கியுள்ளார். மேலும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் தங்களது தொகுதியில் அலுவலகத்துடன் கூடிய சொகுசு பங்களா கட்ட தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: