வியாழன், 2 மார்ச், 2017

எலிசபெத் மகாராணியோடு மோடி பாகுபலி 2 பார்க்கப்போகிறார் .. இங்கிலாந்து ராணியை விட இவர் ஆடை ரிச் ஆக இருக்கணுமே? rss கவலை? ....


ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் இந்தியா முழுக்க பிரம்மாண்ட வரவேற்பு பெற்றது. அனுஷ்கா–பிரபாஸ் நடித்த இந்தப் படம் இதுவரை ரூ.600 கோடி வசூல் செய்ததாகக் கூறப்பட்டது. இதில் ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், தமன்னா என பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளிவந்தது. இதனால் இதன் இரண்டாம் பாகம் பற்றிய எதிர்பார்ப்பு முதல் பாகம் வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஏற்பட தொடங்கியது. இந்த படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முன்னரே ஏப்ரல் 24ம் தேதி லண்டனில் உள்ள பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடுயூட்டில் இந்தியாவின் 70வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்புக் காட்சியாக இந்தப் படம் திரையிட உள்ளது. பாகுபலி 2 படத்துடன் மற்ற சில படங்களும் இந்த நிகழ்வில் திரையிடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் ராணி இரண்டாம் எலிசபெத்தும், பிரதமர் மோடியும் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் ரசிகர்களுக்கு முன்னால் இரு நாட்டு தலைவர்களும் பாகுபலி 2 படத்தை பார்க்க உள்ளனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: