செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

கோவையில் இந்து முன்னணி காவாலிகள் கைது .. காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்தார்கள்


கோவை காதலர் தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழிக்கும் போராட்டம் காந்திபுரம் கிராஸ்கட் சாலை சந்திப்பில் மாலை நடைபெற்றது. போராட்டத்துக்கு செய்தி தொடர்பாளர் சசிக்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள், காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்காததால் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்த 30 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை காந்திபார்க்கில் காதலர் தினத்தை எதிர்த்து விசுவ இந்து பரிஷத்–பஜ்ரங்தள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பஜ்ரங்தள் மாநகர மாவட்ட இணை அமைப்பாளர் மணிகண்டன் தலை மை தாங்கினார். ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொண்டவர்கள் காதலர் தின வாழ்த்து அட்டைகளை எரித்தனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 29 பேரை போலீசார் கைது செய்தனர் தினத்தந்தி

கருத்துகள் இல்லை: