ஞாயிறு, 11 டிசம்பர், 2016

பாலபாரதி ex MLA:ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது என்று எனக்கு தோன்றவில்லை.

ஜெயலலிதா"தமிழ்நாட்டுப் பெண்களுக்கு, அரசியலில் ஈடுபடுவதில் இருக்கும் தயக்கதை உடைத்தவர் ஜெயலலிதா. எங்கு சந்திக்கும்போதும் நலம் விசாரிப்புடனே பேசத் தொடங்குவார். ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த அரசியல் உலகில் தனக்கென்று தனித்த இடம் பிடித்தவர், அதிமுக எனும் பெரிய கட்சியை திறம்பட வழிநடத்தியவர், மாற்றுக்கருத்துகள் பல இருந்தாலும் நான் மதிக்கக்கூடியவர்" என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அமைதியாக பேசத் தொடங்கினார் திண்டுக்கல் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பாலபாரதி. ஆனால்,ஜெயலலிதாவின் மரணம் பற்றிப் பேசும்போது குரலில் சூடேறியது.
" ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது என்று எனக்கு தோன்றவில்லை. சாதாரண காய்ச்சல் என்றுதான் அப்போலோவில் சேர்த்தார்கள். அதற்குப் பிறகு, எதுவுமே வெளிப்படையாக  நடக்கவில்லை என்பது எல்லோருக்குமே தெரியும். அவ்வப்போது அப்போலா மருத்துவமனை அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்தது. 'மருத்துவமனை அறிக்கைகளை விட அரசு சொல்வதுதானே சரியானது' என நான் முகநூலில் எழுதிய அடுத்த நாள், அரசு தரப்பில் அறிக்கை வந்தது.
'சரி... அப்போலாவில் அப்படி என்னதான் நடக்கிறது' என்பதை தெரிந்துகொள்ள, ராகுல்காந்தி சென்று பார்வையிட்ட அதே தினத்தன்று நானும் அப்போலாவுக்குச் சென்றேன். என்னை யாரும் தடுக்கவில்லை. இரண்டாம் மாடி வரை சென்றுவிட்டேன். அங்கே ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி என்னிடம் வந்து, 'அம்மா நலமாக இருக்கிறார்' என்றார். ஆனாலும் அங்கு நடப்பது எல்லாமே ஒரு நாடகம் போல இருந்தது. தீடீரென்று ஒருநாள் ஜெயலலிதாவின் மரணச் செய்தி வருகிறது.
இந்த விஷயத்தில் தொடக்கத்திலிருந்தே எல்லாமே மர்மமாக இருக்கிறது. ஊடகங்கள் 24 நேரமும் மருத்துவமனையில் வாசலில் காத்திருக்கும் நிலையில்கூட, மருத்துவமனையிலிருந்து ஜெயலலிதாவின் உடல் வண்டியில் ஏற்றப்படும் காட்சியைப் பார்க்க முடியவில்லை. அதேபோல போயஸ் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட உடல், அடுத்த நாள் காலை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் நான் பயணங்களில் ஈடுபடும்போது ஒரு விஷயத்தைக் கவனிக்கிறேன். பொதுமக்கள் பலருக்கும் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்கள் நிறைய இருக்கின்றன. அவரின் உடலைப் பார்க்கும்போது ஓரிரு நாட்களுக்கு முன் இறந்தவரின் உடலைப் போல அது இல்லை. அவர் இறந்து சில நாட்களோ... ஒரு மாதமோ கூட ஆகியிருக்கலாம் என்பதுபோலத்தான் இருந்தது. ராஜாஜி ஹாலில் அவர் உடல் கிடத்தப்பட்டிருந்தபோது, நடந்த பல விஷயங்களும் அதைத்தான் உணர்த்தின. ஜெயலலிதா மரணம் பற்றிய எல்லா விஷயங்களையும் பேச வேண்டும். ஏன் இப்போது பேச வேண்டும் என்றால்... மாநிலத்தின் ஆகப் பெரிய அதிகாரத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கே இந்த நிலை என்றால் அவரைப் பார்த்து அரசியலுக்கு வர நினைப்பவர்களுக்கு பெரும் தயக்கத்தை இது உருவாக்கலாம். மேலும் இதில் மத்திய அரசின் தலையீடு இருந்ததைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
ஜெயலலிதாவின் அப்போலோ தினங்களில் நடந்த விஷயங்களை மறைத்துவிட்டு, அடுத்த முதல்வர், பொதுச்செயலாளர் என வெவ்வேறு அஜெண்டாக்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தாவுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மர்மங்கள் உடைபட வேண்டியது அவசியம்" என்றார் பாலபாரதி.
அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேசக்கூடியவர் பாலபாரதி. திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்தவர். ஜெயலலிதா மரணத்தை மர்ம மரணம் என குறிப்பிடுகிறார். எப்போது பார்த்தாலும் நலம் விசாரிப்பார் ஜெயலலிதா என தொடங்கும் பாலபாரதி அவரது உடலை பார்க்கும் போது ஒரு நாளிற்கு முன்னதாக இறந்ததை போல் இல்லை என்கிறார். சாதரண காய்ச்சல் என அப்பல்லோவில் சேர்த்ததற்கு பிறகு எல்லாம் மர்மமாக முடிந்தது என்கிறார். ராகுல் காந்தி வந்து சென்றதற்கு பிறகு ஜெயலலிதாவை காண அப்பல்லோ 2 ஆம் தளம் வரை சென்றதாகவும், அங்கு மூத்த அதிகாரி ஒருவர் அம்மா நலமாக இருக்கிறார் என கூறி அனுப்பி வைத்து விட்டதாகவும் குறிப்பிடுகிறார் பாலபாரதி. “பெண்கள் அரசியலிற்கு வருவதற்கு தூண்டுகோலாய் இருந்தார் ஜெயலலிதா. ஆனால் அவரது இறப்பு அரசியலில் இருக்கும் பெண்களுக்கு பெரும் அச்சத்தை அளித்துள்ளதாக” முடிக்கிறார்  விகடன்,காம்

கருத்துகள் இல்லை: