வெள்ளி, 16 டிசம்பர், 2016

சிகிச்சையின் பலனால் நிமிர்ந்து உட்கார்ந்தார் கலைஞர்

சிகிச்சையின் பலனால் நிமிர்ந்து உட்கார்ந்தார் கலைஞர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கலைஞர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுவாசம் சீராக இருக்க அவருக்கு 'ட்ரக்யாஸ்டோமி' சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. சிகிச்சையின் பலனால் கலைஞர் இன்று மாலை 6.30 மணி அளவில் நிமிர்ந்து உட்கார்ந்து இயல்பாக சுவாசிக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நக்கீரன்

கருத்துகள் இல்லை: