புதன், 3 ஆகஸ்ட், 2016

சசி புஷ்பா விவகாரத்தில் தம்பிதுரையின் (செலக்டிவ்) அஜாக்கிருதை?

கரூர் மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரையின் தலைதான் உருட்டப்படுகின்றது. திமுக எம்.பி. திருச்சி சிவாவை, அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா விமானநிலையத்தில் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக ஈடுப்பட்டதாக கூறி, அவரை கட்சியில் விட்டு நீக்கி முதல்வரும்  அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா  உத்திரவிட்டுள்ளார்.இதையடுத்து சென்னை மற்றும் டெல்லியில் அவ்வப்போது, செய்தியாளர்களை பார்த்து பேட்டியளித்து வரும் சசிகலா புஷ்பா கூறும்போது, தமிழக முதல்வரைப் பகைத்துக் கொள்ளாமல், அவர் சொல்படி நடந்து கொள்’ என தனது குடும்பத்தார் தனக்கு அறிவுரை கூறியதாகவும், ஆனால் இரவு முழுவதும் யோசித்துதான் இந்த முடிவிற்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. சிவாவை அறைந்ததாக சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பா, நேற்று ராஜ்யசபாவில் ஜெயலலிதா தன்னை அடித்ததாக புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் ராஜ்ய சபாவில் இருந்து நான் வீட்டிற்கு வர முடிந்ததா? வரும் வழியில் என்னை விடாமல் ரொம்ப கம்பல் பண்ணினாரு மிஸ்டர் தம்பித்துரை என்றார்.
மேலும் இவர் அவ்வப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது கரூர் மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரையின் தலைதான் உருட்டப்படுகின்றது.மேலும் மாநிலங்களவையோ, மக்களவையோ டெல்லியை பொறுத்தவரை அ.தி.மு.க கட்சிக்கு வலு என்று பெயர் பெற்றிருந்த தம்பித்துரையின் (செலக்டிவ்) அஜாக்கிரதையாலயே இந்த சசிகலா புஷ்பாவின் விஸ்வரூபெமென்று ஆங்காங்கே பேச்சுக்கள் அடிப்பட்டு வருவதால் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான கரூர் தம்பித்துரையின் பதவி விரைவில் பறி போகும் வாய்ப்பு உள்ளதாக அ.தி.மு.க தலைமை கழக வட்டாரங்கள் பேசி வருகின்றன. வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை: