புதன், 21 அக்டோபர், 2015

தத்து : நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சி மத்திய அரசுக்கு உள்ளது...ஜெயா ஜாமீன் புகழ் சாத்தானின்......

மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பு குறித்து மத்திய அரசு தனது அதிர்ப்தியை வெளிப்படுத்தி உள்ளது. முக்கியமாக மத்திய சட்டத்துறை மந்திரி சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத், அருண் ஜெட்லி ஆகியோர் உச்ச நீதிமனற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு பற்றி முதல் முறையாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து. ”நீதிமன்ற தீர்ப்பை ஏற்கொள்ளும் முதிர்ச்சி மத்திய அரசுக்கு உள்ளது. தீர்ப்பு பற்றி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். மேலும் அதை வெளிப்படுத்து உரிமை அவர்களுக்கு உள்ளது. அதேசமயம் மத்திய அரசு இந்த தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார் மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: