புதன், 21 அக்டோபர், 2015

2 தலித் குழந்தைகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை ! உபியில் உயர்ஜாதினரின் கொடுமை..

அரியானா மாநிலம், பரிதாபாத் மாவட்டம், பல்லாப்கரையை அடுத்த சன்பெட் கிராமத்தில் ஜிதேந்தர் என்பவரின் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் அவரது வைபவ், திவ்யா என்ற இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். அவரும், அவரது மனைவி ரேகாவும் படுகாயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஜிதேந்தர் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க ஏற்கனவே போலீசாருக்கு உத்தரவிட்டப்பட்டிருந்ததும், இந்த நிலையில் உயர் வகுப்பினர் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜிதேந்தர் வீட்டிற்கு உரிய பாதுகாப்பு அளிக்க தவறிய 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தீ வைப்பு சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி பாதிக்கப்பட்ட ஜிதேந்தரின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்  nakkheeran,com

கருத்துகள் இல்லை: