வெள்ளி, 6 மார்ச், 2015

அம்மா தாயே நிரந்தர மக்களின் முதல்வரா இரு தாயே ! நீ வழக்கில அப்படியே அமுங்கிடனும்னு பால்சொம்பு காவடி...

மக்களின் முதல்வர் அம்மா சீக்கிரம் வழக்குகளை எல்லாம் ஒருவழியாக்கிட்டு முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த அதிமுக  அமைச்சர் பிரமுகர்கள் எல்லாம் காவடி மண்சோறு ருத்ர யாகம்  எல்லாம்னு வெகுளியா ரோசனை பண்ணவேண்டாம் இது விஷயமே வேற வேற வேற  . அம்மா அப்படியே இந்த கேசுல அமுங்கி போயிடனும் , அப்புறம் அதையே அனுதாப வாக்காக மாத்தி மாத்தி  அரசியல்ல பதவி சுகத்தோடு எஞ்சிய காலத்தையும் ஓட்டிடணும் . இதுதாங்க சத்தியம் நம்புனா நம்புங்க.  கொஞ்சம் நேரம் இந்த அடிமைங்களின்  பாடி லாங்குவேஜை பாத்தாலே உங்களுக்கு புரியும் . அம்மா அடங்கி இருப்பதிலே எவ்வளவு மகிழ்ச்சியாக இவிங்க இருக்காங்க தெரியுமா? முகம் அழுவுது கண்ணு சிரிக்குது . இது ஒரு வரலாற்று உண்மைங்க.

கருத்துகள் இல்லை: