ஞாயிறு, 1 மார்ச், 2015

சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுடன் பேசி முடிவு! அருண் ஜெட்லி பேட்டி

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் நிதிமந்திரி அருண்ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:–
வரும் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். வசதி படைத்தவர்கள் மானியத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏழைகள் மட்டுமே மானியம் பெறவேண்டும்.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசுடன் பேசி முடிவு எடுக்கப்படும். வரி ஏய்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். வரி செலுத்துவோரிடம் அதிக பணம் இருப்பதையே அரசு விரும்புகிறது. ராணுவத்தில் ஒரு பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை: