செவ்வாய், 3 மார்ச், 2015

கற்பழிக்கும்போது எதிர்த்ததால் கொடூரமாக துன்புறுத்தினோம் ! நியாயம் கற்பிக்கிறான் டெல்லி காம கொடூரன்

புதுடில்லி: ''கற்பழிக்கும் போது, முரண்டு பிடித்து, எதிர்ப்பு தெரிவித்து ஆக்ரோஷமாக நடந்து கொண்டதால் தான், அந்தப் பெண்ணை கொடூரமாக துன்புறுத்தினோம்,'' என, டில்லி மருத்துவ மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்ததற்காக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான, முகேஷ் சிங், 28, கூறியுள்ளான்.டில்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவன், பி.பி.சி., செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: எங்களைப் போன்ற கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கில் போடுவதால், கற்பழிப்புக்கு ஆளாகும் பெண்களுக்குத் தான் பாதிப்பு. கற்பழிக்கப்படும் பெண்ணை, சும்மா மிரட்டி விட்டு விடுபவர்கள் கூட, 'இவளை உயிருடன் விட்டால் நம்மை காட்டிக் கொடுத்து விடுவாள்' என நினைத்து, கொன்று விட வாய்ப்பு உள்ளது. டில்லியில் நடைபெற்றது ஒரு விபத்து. அந்த சம்பவத்திற்கு, அந்தப் பெண்ணும் ஒரு காரணம் தான். சும்மா இருந்திருந்தால், நாங்கள் அவளை கெடுத்து விட்டு விட்டிருப்போம். எங்களுடன் பலமாக போராடினாள்; ஆக்ரோஷமாக எதிர்த்தாள். அதனால் தான், நாங்களும் கொடூரமாக நடந்து கொள்ள வேண்டியதாகி விட்டது. நல்ல பெண்களுக்கு, ராத்திரியில் என்ன வேலை... 9:00 மணிக்கு மேல், காதலனுடன் ஊர் சுற்றிய அந்தப் பெண்ணை யாரும் குற்றம் சொல்லவில்லை. ராத்திரி ஆனா, வீட்டில இருக்க வேண்டிய பெண், ஊர் சுற்றலாமா? இவ்வாறு அவன் கூறியுள்ளான்.  உனக்கு அதரவாக பேசிய பண்ணாடைங்களுக்கு , மனித உரிமை பேசுபவர்களுக்கு இந்த கேள்வி? இவனை தூக்கில் போட கூடாது ஏன் வாதிடுகறிர்கள்? இன்னும் நீ உயிரோடு இருப்பதே இந்த பாழாபோன சட்டத்தினால் தாண்டா...உனக்கு தூக்கு தண்டனை போதாது....அதுக்கும் மேலே ,,அதுக்கும் மேலே ,,,,அதுக்கும் மேலே,,,,,,,,,,,,,,,,,,,,
தூக்கு தண்டனை கைதியான அவனிடம் எவ்வாறு, பி.பி.சி., செய்தி நிறுவனம் பேட்டி எடுத்தது என்பது விளக்கப்படவில்லை.


ஓடும் பஸ்சில் கொடூர செயல்:

கடந்த, 2012, டிசம்பர் 16ல், ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டாள். 13 நாள் சிகிச்சைக்குப் பிறகும், பலனளிக்காமல், சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தாள். அந்த கொடூர குற்றவாளிகளில், ஒருவன், சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். மீதமுள்ள, ஐந்து பேரில், நான்கு பேருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தினமலர்.com

கருத்துகள் இல்லை: