வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

கிரானைட் ஸ்குவாஷ் போட்டி: அரை இறுதியில் தீபிகா–ஜோஸ்னா

கிரானைட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி கனடாவின் டோரண்டோவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் 11-8, 9-11, 11-6, 7-11, 13-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜென்னி டன்கால்ப்பை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 11-11, 11-8, 11-6 என்ற நேர் செட்டில் ரசால் கிரின்ஹாமை (ஆஸ்திரேலி
யா) வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார். அரை இறுதி ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த தீபிகா-ஜோஸ்னா கோதாவில் இறங்குகிறார்கள். maalaimalar.com

கருத்துகள் இல்லை: