சனி, 21 பிப்ரவரி, 2015

முடக்கப்பட்ட 6 கம்பெனிகளும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதல்ல: கம்பெனிகளின் வக்கீல்கள் வாதம்

பெங்களூரு:"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், முடக்கப்பட்ட ஆறு கம்பெனிகளும், வங்கி கடனில் தான் இயங்கின. ஜெயலலிதாவுக்கு சொந்தமானதல்ல,” என, கம்பெனிகளின் வக்கீல் உதயஹொல்லா வாதாடினார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், முடக்கி வைக்கப்பட்ட, மெடோ அக்ரோ பார்ம், ரிவர்வே அக்ரோ, இண்டோடோகா, சயனோரா, லெக்ஸ் பிராபர்ட்டி, ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் ஆகிய, ஆறு கம்பெனிகள், 'சீல்' வைத்தது குறித்த வழக்கு விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வக்கீல் உதய ஹொல்லா: சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், ஆறு கம்பெனிகளுக்கும் எந்த தொடர்புமில்லை. இக்கம்பெனிகள் தில்லை நாயகம், சண்முகம், குமார், செந்தமிழ் செல்வனுக்கு சொந்தமானது. கம்பெனிகளில் ஒன்றான, இண்டோ டோகா வுக்கு, அசையா சொத்துகளே கிடையாது. இதை தெரிந்து கொள்ளாமலேயே, கம்பெனிக்கு சொந்தமான, அசையா சொத்துகளை, பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிபதி குமாரசாமி: கம்பெனியின், இரு இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதன் நிர்வாக இயக்குனர் யார்?  நாலு கம்பெனிகளும் தொழிலாளர்களால் நடத்த படுகிறது. ரெண்டு கம்பெனிகளுக்கு தான் ஓனர்கள் இருக்கிறார்கள்..ஹஹஹஹ நம்பள எப்படி முட்டாளாக்க பாக்குறாங்க அப்படின்னு குன்ஹா கடுப்பாயிட்டார்...ரெண்டு பினாமிங்களை தான் பிடிக்க முடிஞ்சதோ? //கம்பெனியின் சொத்து கம்பெனிக்கு தான் தனி உரிமையாளருக்கு சொந்தமில்லை// கம்பெனி தானாகவே உருவாகுமோ? அந்த தனி மனிதர் முதலீடு போடவில்லையோ? அதாவது வங்கி வந்து கடன் கொடுத்து இருக்கு ஆனா கம்பெனிக்கு ஓனர் இல்லை..அப்ப அந்த வங்கி யாருக்கு கடன் கொடுத்தது? காத்துகிட்ட கடன் கொடுத்ததா? நிர்வாக இயக்குனரே இல்லாமல் வங்கி கடன் கொடுக்குமா? அப்ப வங்கி யாருகிட்ட கடன் கொடுத்தது யார் பேரில் கடன் கொடுத்தது யார் கையெழுத்து இட்டு கடன் வாங்கினார்..தினமலர் செய்தியை விளக்கமா விரிவா போடுங்கப்பா..ஒரே கொழப்பமா இருக்குது..எங்களுக்கே இப்படின்னா நீதிபதிக்கு எப்படியோ.....

உதயஹொல்லா: யாருமில்லை. கம்பெனி, தொழிலாளர்களால் நடத்தப்படுகிறது. இக்கம்பெனிகள், 1986 முதல் இயங்கி வருகிறது. வங்கி கடனில் நடத்தப்படுகிறது. ஜெயலலிதாவின் பணத்தில் நடத்தப்படவில்லை.
நீதிபதி: இத்தனை ஆண்டுகளாக, நீதிமன்றத்தில் ஏன் முறையிடவில்லை.
உதயஹொல்லா: மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திலும், முந்தைய சிறப்பு நீதிமன்றத்திலும் எங்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கம்பெனிகள் மீது வங்கி கடன் உள்ளது. கம்பெனி முடக்கப்பட்டு விட்டதால், கடன்களை செலுத்த இயலவில்லை. தொழிலாளர்கள், வேலை இழந்துள்ளனர். எனவே, கம்பெனியை மீண்டும் இயக்க, அனுமதிக்க வேண்டும்.
வக்கீல் ஜெய்குமார் பாட்டீல்: 'சயனோரா' உரிமையாளர் சண்முகம், கம்பெனியை, பாஸ்கர ராவ், நாராயணராவ் என்பவரிடமிருந்து, விலைக்கு வாங்கி நடத்தி வருகிறார். எந்த நோட்டீஸூமின்றி முடக்கி விட்டனர். இது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது. இது போன்ற நிலையில், கம்பெனிகளுக்கு நோட்டீஸ் கொடுத்து, விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விஷயம், இவ்வழக்கில், பின்பற்றப்படவில்லை.
வக்கீல் குலசேகர்: முடக்கப்பட்டுள்ள, ஆறு கம்பெனிகளுக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் எந்த தெடர்பும் இல்லை. அவர்கள் பங்குதாரர்கள் என்பதால், கம்பெனிகளே, அவர்களுக்கு சொந்தம் என்பது ஏற்க தக்கதல்ல. ஒரு கம்பெனியின் சொத்து, எந்த தனி மனிதருக்கும் சொந்தமல்ல. கம்பெனிக்கு மட்டுமே உரிமையானது. எனவே, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.விசாரணை, வரும், 23 ம் தேதி தொடர்கிறது. dinamalar.com

கருத்துகள் இல்லை: