வெள்ளி, 29 நவம்பர், 2013

உச்சநீதிமன்றம்: திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல!

திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருமணம் செய்துகொள்ளாமல் ஆண் ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்ட பெண் ஒருவர், அந்த ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கேஸ்.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
திருமணம் செய்துகொள்வதோ, செய்துகொள்ளாமல் இருப்பதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல. இத்தகைய உறவை பல நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கி உள்ளன. இந்த உறவில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. இந்த உறவு முறிவடைந்தால் பெண்களும், இந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளும் தான் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பெண்களையும் அவர்களது குழந்தைகளையும் பாதிப்பில் இருந்து பாதுகாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில், திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவை பாராளுமன்றம் ஊக்குவிக்க முடியாது. எனவே, பொதுமக்கள் இதற்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ கருத்து தெரிவிக்கலாம்.கள்ளத்தொடர்பு, பலதார மணம் ஆகியவற்றை ‘திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல்’ உறவில் சேர்க்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: