திங்கள், 25 நவம்பர், 2013

ஆருஷி கொலை வழக்கு தீர்ப்பு இன்று ! கௌரவ கொலை என்று சந்தேகம் ?

தில்லி அருகே நொய்டாவில் பல் மருத்துவர் தம்பதியின் மகள் ஆருஷி மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் ஆகியோர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் காஜியாபாத் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் திங்கள்கிழமை (நவம்பர் 25) தீர்ப்பளிக்க உள்ளது.
ஐந்தரை ஆண்டுகளாக நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவந்த இந்த வழக்கில் சிபிஐ
நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி எஸ். லால் தீர்ப்பு அளிக்க உள்ளார்.
தில்லி அருகில் உள்ள நொய்டாவைச் சேர்ந்த பல் மருத்துவ தம்பதி ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார். அவர்களுடைய 14 வயது மகள் ஆருஷி. 2008, மே மாதம் 15-ஆம் தேதி தனது படுக்கையறையில் ஆருஷி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார்.

அது குறித்து விசாரணை நடத்திய உத்தர பிரதேச போலீஸார் ராஜேஷ் தல்வார் வீட்டில் வேலை செய்த ஹேம்ராஜ்தான் ஆருஷியைக் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டார் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால், மறுநாள் தல்வார் தம்பதி வசித்த குடியிருப்பு மாடியில் வேலைக்காரர் ஹேம்ராஜ் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அதையடுத்து, மீண்டும் விசாரணை நடத்திய உத்தர பிரதேச போலீஸ், ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வாரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால் மாநில போலீஸார் விசாரணை குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்போது உத்தர பிரதேச முதல்வராக இருந்த மாயாவதி இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கழித்து சரியான ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை முடித்துக் கொள்ள விரும்புவதாக காஜியாபாத் நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியது. ஆனால், இந்தக் கோரிக்கையை நிராகரித்த சிறப்பு நீதிபதி எஸ். லால், விசாரணையைத் தொடரும்படி உத்தரவிட்டார். அதை எதிர்த்து ஆருஷியின் பெற்றோர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்தனர். ஆனால், காஜியாபாத் சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்று அந்த நீதிமன்றங்கள் தெரிவித்துவிட்டன. இந் நிலையில், ஆருஷியின் தாய் நூபுர் தல்வார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இக் கொலை வழக்கு தொடர்பாக தல்வார் தம்பதி 15 மாதங்களுக்கும் மேலாக தொடர் விசாரணையை சந்தித்து வந்தனர். ஏறக்குறைய ஐந்தரை ஆண்டுகளாக ஆருஷி கொலை வழக்கு ஊடகங்கள் வழியாக பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந் நிலையில், விரைவில் ஓய்வுபெற உள்ள நீதிபதி எஸ். லால் திங்கள்கிழமை தீர்ப்பளிக்கிறார். தினமணி.com

கருத்துகள் இல்லை: