வியாழன், 28 நவம்பர், 2013

இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் சங்கம் மவுனம்! சங்கர ராமனை கொன்ற குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்


வே.மதிமாறன்
காஞ்சிபுரம் கோயிலில் சங்கர ராமன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு,
‘சங்கர ராமனின் சம்சாரம்’தான் காரணம் என்று சந்தேகிக்காமல் தீர்ப்பளித்த, நியாயத்தையும் பெண்ணை மதிக்கும் செயலையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும். இது தாண்டா தீர்ப்பு. சங்கர ராமன் எதனால் வெட்டி கொலை செய்யப்பட்டார்?
அவர் இந்து மத எதிர்ப்பும், பார்ப்பன எதிர்ப்பும் கடவுள் மறுப்பும் பேசிய பெரியாரின் தொண்டரா? இல்லை,
சங்கராச்சாரியராக ஒரு தலித் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தாரா?
இந்து கண்ணோட்டமும் சங்கராச்சாரியர்களுக்கே ‘ஆச்சாரத்தை’ போதித்த அல்லது சுட்டிக்காட்டிய தீவிரமான ஜாதி உணர்வு கொண்ட பார்ப்பனர்.
இப்படி பார்ப்பனியத்திற்கும் இந்து மதத்திற்கும் உண்மையாக இருந்த அவரை கொலை செய்ததை குறித்து, எந்த வருத்தமோ கண்டனமோ தெரிவிக்கவில்லை பிராமணர் சங்கமும், இந்து அமைப்புகளும்.
சரி. சங்கர ராமனை, ஜெயேந்திரனும் அவரின் கூட்டாளிகளும் கொலை செய்யவில்லை என்று கோர்ட் சொல்லிவிட்டது.
அப்படியானால் ‘உண்மை இந்துவான சங்கர ராமனை கொன்ற குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்’ என்ற கோரிக்கையை ஏன் பிராமணர் சங்கமும் இந்து அமைப்புகளும் எழுப்பவில்லை.mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை: