வியாழன், 25 ஜூலை, 2013

பீகாரில் லாலு கை ஓங்குகிறது.. நிதிஷுக்கு நெருக்கடி

டெல்லி: சி.என்.என்.ஐபிஎன் தொலைக்காட்சியும் தி ஹிந்துவும் இணைந்து நடத்திய லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பில் பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு கடந்த தேர்தலைவிட கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 40 தொகுதிகள் உள்ளன. கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 20, பாரதிய ஜனதா கட்சி 12, ராஷ்டிரிய ஜனதா தளம் 4, காங்கிரஸ் 2 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. ஆனால் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 24%, ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 19%, பாஜகவுக்கு 14%, காங்கிரஸூக்கு 10% என இருந்தது. தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியானது 15-19 தொகுதிகளையும் ராஷ்டிரிய ஜனதா தளமானது 8 முதல் 12 இடங்களையும் பாஜக 8-12, காங்கிரஸ் 4 இடங்களையும் கைப்பற்றும் என்கிறது கருத்துக் கணிப்பு. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 25%, ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 24%, பாஜகவுக்கு 22%, காங்கிரஸுக்கு 10% என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: