புதன், 13 பிப்ரவரி, 2013

நடிகர் சந்தானம் மீது FIR கோரி பாக்யராஜ் வழக்கு

நடிகர் சந்தானம் மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரி இயக்குனர் கே.பாக்யராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். இயக்குனர் பாக்யராஜ் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: இன்று போய் நாளை வா படத்தின் கதை எனக்கு சொந்தமானதாகும். இந்தக் கதையின் உரிமை கேட்டு தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி முதலில் என்னை அணுகினார். நான் மறுப்பு தெரிவித்து விட்டேன். இந்நிலையில் எனது கதையை மையமாக வைத்து நடிகர் சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை உருவாக்கியுள்ளார். இதனால் எனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நடிகர் சந்தானம், தயாரிப்பாளர் ராமநாராயணன் மற்றும் புஷ்பா கந்தசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தேன். இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது  tamilmurasu.org

கருத்துகள் இல்லை: