திங்கள், 11 பிப்ரவரி, 2013

பீகார் : பெண்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்தால் 10 ஆயிரம் அபராதம்

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள மாஹனுபூர் என்ற கிராமத்தில் பெண்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிவதற்கும், செல்போன் பயன்படுத்துவதற்கும் அக்கிராம தலைவர்கள் தடை விதித்துள்ளனர்.இதனை மீறி பெண்கள் இத்தகைய உடைகளை அணிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட் டுள்ளது. கடந்த வாரம் கிராமத்தை சேர்ந்த 3 பெண்கள் காணாமல் போனதை தொடர் ந்து கிராமத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  பெண்கள் வீட்டிற்கு வெளியே டி - சர்ட், ஜீன்ஸ் அணிந்தாலும், செல்போன் பேசினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும் என்று கிராம தலைவர்கள் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: