வியாழன், 21 அக்டோபர், 2021

இலங்கையில் இருந்து 130 புத்த துறவிகள் வருகை..!! புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறப்பு

தினகரன்  : இலங்கையில் இருந்து 130 புத்த துறவிகள் வருகை..!!  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் சர்வதேச தரத்தில் ரூ.260 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குஷிநகர் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்துள்ளார்.
விழா மேடையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதி ஆதித்யா சிந்தியா, அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சர்வதேச புத்தமத யாத்திரைத் தலங்களை ஒருங்கிணைக்கும் வகையில் செயல்படும் குஷிநகர் விமான நிலைய திறப்பில் இலங்கை அமைச்சர் நமல் ராஜபக்சே தலைமையில் 5 அமைச்சர்களுடன் 130 புத்த துறவிகள் பங்கேற்க வருகை தந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: