வெள்ளி, 10 நவம்பர், 2017

10 இலட்சம் வெளிநாட்டவர்கள் கனடாவில் குடியேற அனுமதிக்கப்பட உள்ளனர்.


Thavam Pakkiyam : அடுத்து வரும் மூன்று வருடங்களில் 10 இலட்சம் வெளிநாட்டவர்கள் கனடாவில் குடியேற அனுமதிக்கப்பட உள்ளனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என உலக நாடுகள் வெளிநாட்டில் இருந்து குடிபெயர்பவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் கனடாவின் இந்த முடிவு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பை கனடாவின் குடியேற்றத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, 2018ஆம் ஆண்டு 310,000 வெளிநாட்டவர்களுக்கும், 2019ஆம் ஆண்டில் 330,000 வெளிநாட்டவர்களுக்கும், 2020ஆம் ஆண்டு 340,000 வெளிநாட்டவர்களுக்கும் கனடாவில் குடிபெயர அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர் அகமது ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இது கனடா வரலாற்றில் என்று மட்டும் இல்லாமல் உலக நாடுகளின் வரலாற்றிலேயே முக்கியமான அறிவிப்பாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிட்ட தரவின் படி வெளிநாடுகளில் இருந்து கனடா வந்து பிள்ளைகளைப் பெற்றவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது என்றும், கனடியர்களின் பிறப்பு விகிதம் சரிந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.
கனடாவுக்கு குடிபெயர்வதில் முதல் இடத்தில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். இரண்டாம் இடத்தில் ஆபிரிக்கா நாடுகள் உள்ளன. இந்தத் தரவு 2011 முதல் 2016 வரையில் நடைபெற்ற குடிபெயர்வுகளை பொறுத்தது கூறப்படுகின்றது.
அடுத்து இந்த இடத்தில் ஆசிய நாடுகள் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளதைப் போன்ற கடுமையான விதிகள் கனடாவில் இல்லை எனவும், எளிதாக கனடாவில் குடிபெயரலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவில் குடியுரிமை பெறுவது எப்படி?
கனடாவில் குடியுரிமை பெறுவதற்கு ஒருவர் 6 வருடங்கள் வரை கனடாவில் இருக்க வேண்டும்.
உங்களுக்கு 18 வயது நிரம்பவில்லை என்றால் கனடா குடியுரிமை பெறுவது கடினம்.
மைனர்களுக்குத் தங்களது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான காப்பாளர் தான் விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது பெற்றோர் அல்லது காப்பாளருக்கும் சேர்ந்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பெற்றோர் ஏற்கனவே கனடா குடியுரிமை பெற்று இருக்க வேண்டும். இல்லை என்றால் குடியுரிமை பெற விண்ணப்பிக்க வேண்டும்.
கனடாவில் வேகமாகக் குடியுரிமை பெறுவதற்கு எக்ஸ்பிரஸ் எண்ட்ரி முறைகள் உள்ளன. இதன் கீழ் திறமையான ஊழியர்களுக்கு அவர்களது திறமையின் கீழ் வேலையும் அளிக்கப்படும்.
எக்ஸ்பிரஸ் எண்ட்ரி மூலம் வருபவர்களுக்கு அவர்களது அறிவு, வேலை மற்றும் பிற விண்ணப்பதாரர்களைப் பொருத்து குறிப்பிட்ட மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
கூடிய மதிப்பெண்கள் பெறுபவர்கள் நிரந்தரக் குடியுரிமை பெற்றுக்கொள்ள வரவேற்கப்படுவார்கள்.
நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் 5 வருடத்தில் குறைந்தது 2 வருடங்கள் கனடாவில் தங்க வேண்டும். இரண்டு வருடம் வரை தங்கவில்லை என்றால் நிரந்தர வீடு நிலையினை இலக்க நேரிடும்.
சிலநேரம் கனடாவில் வசிக்கவில்லை என்றால் கனடாவின் அரசு சார்ந்த வேலையில் வெளிநாடுகளில் பணிபுரிய வேண்டும்.
6 வருடத்தில் 4 வருடம் வரை வருமான வரி செலுத்தி இருக்க வேண்டும். ஏன் என்றால் உங்கள் வேலையின் முக்கியத்துவத்தினை அவர்கள் அறிவதற்காக.
கனடாவில் இரண்டு மொழிகள் அலுவலக மொழிகளாக உள்ளன. அவை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் ஆகும். குடியுரிமை பெற இரண்டில் ஒரு மொழியில் தங்கு தடையின்றி இலக்கணம், திசைகள் மற்றும் தேவையான அளவு திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும்.
கனடாவின் வரலாறு, மதிப்புகள், நிறுவனங்கள் மற்றும் சின்னங்களைப் பற்றி விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முறையான வினாடி வினா தேர்வுக்கு விடையளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: