ஞாயிறு, 5 நவம்பர், 2017

வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர்திறப்பு

தினகரன் :கடலூர்: தொடர்மழை காரணமாக வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 2000 கனஅடி நீர்வரத்து உள்ளதால் ஏரி நீர்மட்டம் 45 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. நீர்மட்டம் உயர்வால் சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். வழியாக 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடலுார்: கனமழை காரணமாக கடலுார் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. நீர் வெளியேற்றம் இல்லாததால் வேகமாக ஏரி நிரம்பிவருகிறது. முழு கொள்ளவான 47.5 அடி வீராணம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 44.64 அடியை எட்டியுள்ளது. வடவார் வாய்க்கால் வழியாக வினாடிக்கு 1,500 கன அடி நீர் வரத்து உள்ளது.

கருத்துகள் இல்லை: