திங்கள், 13 பிப்ரவரி, 2017

திவாகரனுக்கு எந்த நடிகையை பிடிக்கிறதோ அன்றே..!அட்டூழியம்


தமிழ் திரைத்துறையில் சசியின் மாஃபியா கும்பலும், ஜெயா டிவியும் செய்த அட்டூழியங்கள்: தமிழ் சினிமாத்துறையினர் சசிகலாவினாலும், அவரது மன்னார்குடி மாஃபியா கும்பலினாலும், ஜெயா டிவியினாலும் பட்டக் கஷ்டங்களை மனம்குமுறி  இப்போது வெளிப்படையாக சொல்ல தொடங்கியுள்ளனர். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை, அவருக்கே தெரியாமல் அவரது பெயரை சொல்லி சசிகலாவும் அவர் கும்பலும் அடித்த கொட்டம் வெளிவர ஆரம்பித்துள்ளது. சிவாஜி கணேசன், அவர் மகன்கள் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோரை மிரட்டி, ராம்குமார் மகளை சுதாகரனுக்கு திருமணம் செய்து வைத்தனர். உயிர் பயத்தில் இறுதியில் ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர். அந்த திருமணத்தில் இசை அமைக்க ஏ.ஆர்.ரகுமான் மறுத்தபோதும் மிரட்டி அழைக்கப்பட்டார்.
சொத்துக்களை மிரட்டி பெறுவதில் சசி கும்பலுக்கு நிகர் யாரும் இல்லை. இசை அமைப்பாளர் கங்கை அமரனின் பையனூர் பங்களாவை மிரட்டி எழுதி வாங்கினார்.
இத்தனை நாட்களும், தன்னால் வெளியே சொல்ல முடியவில்லை. இப்போது முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் துணிச்சலான முடிவுகளால் தாமும், தைரியமாய் வெளியே சொல்லுவதாக கூறியுள்ளார்.
அதே போல தான் சென்னையில் உள்ள பீனீக்ஸ் மால், ஜாஸ் சினிமாஸ் அபகரிக்கப்பட்ட கதைகளும்.
ஏற்கனவே பாலு ஜுவல்லர்ஸ் உரிமையாளரை மிரட்டி இறுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டதை இந்த உலகமே அறியும்.
திருமண மிரட்டல், சொத்துக்காக மிரட்டல் என்பதையும் தாண்டி, சசியின் குடும்பத்தின் ஆண் பொறுக்கிகள் பெண்கள் விஷயத்தில் செய்த பொறுக்கித்தனம் ஏராளம்.
தன் மகள் வயதில் இருந்த செரீனாவுக்கு நடராஜன் செய்த சேட்டைகள் அனைவரும் அறிந்ததே.
தினகரன், வெங்கடேஷ், திவாகரன் தொடங்கி சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் வரை நடிகைகளுக்கும், இளம் பெண்களுக்கும் கொடுத்த டார்ச்சர் ஏராளம்.
‘கில்லி’ படத்தில் வரும் பிரகாஷ்ராஜை போல, ஒரு பெண்ணை (நடிகையை) தனக்கு பிடித்து விட்டால் அவரை ஒரு முறையாவது அடைந்து விட வேண்டும் என்று நினைப்பவர் இளவரசியின் மகன் விவேக்.
பல முன்னணி நடிகைகளே  இந்த பொறுக்கிகளால் பாதிக்கப்பட்டனர் என்றால் மற்ற சாமானிய பெண்களின் பட்டியலை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.
ஒரு  13 வயது சிறுமி நடிகையை திவாகரன் படுத்திய பாடு ஐயோ ரகம்.
அடுத்து- ஜெயா டிவி மூலம் திரைத்துறையினரை மிரட்டுவது. சமீபத்தில் வந்த இயக்குனர் திரு. விசு அவர்களின் வீடியோ பதிவை பார்த்திருப்பீர்கள். எவ்வளவாய் மிரட்டப் பட்டார் என்று.
புது படங்கள் வரும் போது அந்த படத்தின் ஒளிபரப்பு உரிமை ஜெயா டிவிக்கே தர வேண்டும் என்று மிரட்டப்பட்ட தயாரிப்பாளர்கள் பலர்.
ஆஸ்கர் ரவிச்சந்திரன், சூப்பர் குட் பிலிம்ஸ், தாணு, எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ், ராஜலக்ஷ்மி பிலிம்ஸ் என்று பலர் தங்கள் படங்களை கொடுக்க வேண்டும் என்று மிரட்டப்பட்டனர். அதுவும் அடி மாட்டு விலைக்கு.
விஸ்வரூபம் படத்தின் போது, கமலஹாசன் எப்படி மிரட்டப்பட்டார் என்று அனைவரும் அறிந்ததே. நாட்டை விட்டே போகிறேன் என்று அவர் சொல்லும் அளவுக்கு கொடுமை செய்தனர்.
2006 சட்டசபை தேர்தலில் 200 கோடிக்கு கட்சியில் சேர கமலிடம் விலை பேசி மிரட்டிய கும்பல் இது. அதே தேர்தலில் ஆச்சி மனோரமாவையும் மிரட்டப்பட்டார். அதிலிருந்து அவரது உடல்நிலை மோசமடைந்தது.
2015 சென்னை வெள்ளத்தின் போது கமலை அடியாட்களை வைத்து மிரட்டியதும், அவர் வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு மின்சாரத்தையும், தண்ணீரையும் துண்டித்த கும்பல்- சசியின் மாஃபியா கும்பல்.
தலைவா படம் ரிலீஸின் போது, விஜய்க்கு இவர்கள் கொடுக்காத குடைச்சலா?இன்னும் இவர்களால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் ஏராளம்.
இத்தனை நாட்களும் வெளிய சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்தவர்கள் இப்போது திரு.ஓபிஎஸ் அவர்களின் துணிச்சலான சசி எதிர்ப்பு செயல்களால் நேரிடையாகவும், வெளிப்படையாகவும் தங்களது பாதிப்புகளை சொல்ல ஆரம்பித்துள்ளனர். லைவ்டே

கருத்துகள் இல்லை: