வெள்ளி, 13 மே, 2016

கேரளா ஆதிவாசிகளின் நிலத்தை பறித்த நாயர் நம்பூதிரி +கேரளா அரசாங்கங்கள் ... மோடியின் குஜராத்திலும் இதேதான்


கேரளாவில் ஆதிவாசிகளில் நிலை கவலைக்கிடம் தான். மறுக்கவே முடியாது.
அதை யார் பேசுவது? மோடியா? அவருக்கென்ன தகுதி இருக்கிறது?
அவரிடம் ஆதிவாசிகளைக் காக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா? பாஜகவிடம் ஏதும் திட்டம் இருக்கிறதா?
அவரது ஆட்சியில் குஜராத்தில் ஆதிவாசிகள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். அவர் மட்டுமல்ல, இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஆதிவாசிகளில் நிலை படு பரிதாபம்.
யாரிடமும் அதற்கான கொள்கை இல்லை.
இடது, வலது, மத்திய என எந்தக் கட்சியிடமும் இல்லை.
எல்லோரும் ஆதிவாசியை விலக்கிய ஒரு வளர்ச்சிக் கொள்கையையே கடைபிடிக்கின்றனர்.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா போல அவர்களது நிலங்களை, காடுகளை, நதிகளை, வீடுகளை, கடவுள்களை, மொழியை, பண்பாட்டை, கதைகளைக் கொன்றே தான் நவீன இந்தியா கட்டபட்டிருக்கிறது.
கேரள மக்கள், கேரளாவை மோடி அவமதித்தார் என்று ஒன்று கூடியதை நாம் வரவேற்போம்.
மோடிக்கு எதிராக கட்சி வித்தியாசம் இல்லாமல் மலையாளிகள் எல்லோரும் இணைந்ததை வரவேற்போம்.
அதே நேரத்தில் ஆதிவாசிகளை நாம் அழித்தோம், அழித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மனதில் இருத்திக்கொள்வோம்.
அதை மாற்றுவோம்!
Amudhan Ramalingam Pushpamvanam facebook

கருத்துகள் இல்லை: