சனி, 12 மார்ச், 2016

காணமல் போன மாணவனும் ஆசிரியையும் கோர்டில் ஆஜார்....தம்பதிகளாகவே வாழவிருப்பம்.....

தென்காசி
கடந்த ஓர் ஆண்டாக தலைமறைவாக இருந்த பள்ளிக்கூட ஆசிரியையும், மாணவரையும் திருப்பூர் பகுதியில் போலீசார் மீட்டனர். ஆசிரியை தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இருவரையும் போலீசார் நேற்று தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
ஆசிரியை–மாணவர் மாயம் நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தவர், கோதை லட்சுமி (வயது 23). இவர் கடந்த 2014–ம் ஆண்டில் 6 மாதம் அந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்தார்.   இது வெறும்  சட்ட பிரச்சனையாக மட்டும் பார்க்க கூடாது , இருவரும் கணவன் மனைவியாக வாழத்தொடங்கி விட்டார்கள். ஏன் அதை அங்கீகரிக்க கூடாது? பிரிடீஷ்காரன் சட்டத்தை வைத்துகொண்டு எல்லாவற்றையும் எடை போடமுடியாது.   
எல்.கே.ஜி. வகுப்புக்கு பாடம் நடத்தினார். அதே ஆண்டில் டிசம்பர் மாதம் முதல் அவர் வேலைக்கு செல்லவில்லை. எம்.எஸ்சி. பட்டதாரியான கோதைலட்சுமிக்கு, செங்கோட்டை அருகில் உள்ள காலாங்கரை சொந்த ஊர் ஆகும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31–ந்தேதி கோதைலட்சுமி திடீர் என்று மாயமானார். அவரை பெற்றோரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால், அவரைப் பற்றி தகவல் தெரியவராததால், தந்தை கேசரி செங்கோட்டை போலீசாரிடம் புகார் செய்தார்.
கோதைலட்சுமி மாயமான நாளில், 10–ம் வகுப்பு மாணவர் ஒருவரும் மாயமானார். இதுதொடர்பாக கடையநல்லூர் போலீசில், புகார் செய்யப்பட்டது.
காதல் இருவரும் மாயமானது குறித்து 2 போலீஸ் நிலையங்களிலும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில், ஆசிரியை கோதைலட்சுமி வேலைபார்த்து வந்த, அந்த பள்ளிக்கூடத்தில்தான் அந்த மாணவரும் 10–ம் வகுப்பு படித்து வந்தார் என்ற விவரம் தெரியவந்தது.
பள்ளிக்கூடத்தில் படித்து வந்த அந்த மாணவரும், ஆசிரியை கோதைலட்சுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். பள்ளிக்கூட இடைவேளை நேரங்களில் இருவரும் சந்திப்பது, வெளியிடங்களில் சுற்றித்திரிவது என்று இருந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மாணவர் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் ஆசிரியையுடன், மாயமாகி விட்டார்.
தென்காசி பகுதியில் இருந்து கிளம்பிய அவர்கள் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலம் என அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தனர். அவர்களுடைய நண்பர்களுடன் செல்போனில் பேசுவதை வைத்து இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
ஐகோர்ட்டில் மனு இந்த நிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையில், அந்த மாணவரின் தாயார் சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவரையும், ஆசிரியை கோதைலட்சுமி ஆகிய 2 பேரையும் கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் மீட்பு இந்தநிலையில் திருப்பூர் பகுதியில் இருவரும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததை போலீசார் கண்டுபிடித்து, அவர்களை பிடித்தனர்.
அந்த மாணவர் ஒரு பனியன் கம்பெனியிலும், ஆசிரியை கோதைலட்சுமி தனியார் பள்ளிக்கூடம் ஒன்றிலும் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். கோதைலட்சுமி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
கோர்ட்டில் ஆஜர் அங்கிருந்து இருவரையும் நேற்று மதியம் நெல்லை மாவட்டம் புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். மாலையில் கடையநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் இருவரையும் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்  dailythanthi.com/

கருத்துகள் இல்லை: