திங்கள், 10 ஆகஸ்ட், 2015

குஷ்பூ: தி.மு.க.வில் இருந்து ராஜினமா செய்த காரணம் எனக்கும் கலைஞருக்கும் மட்டும் தெரியும்

திடீரென விலகிய மர்மம் குஷ்பு தி.மு.க.வை விட்டு ஏன் விலகினார் என்ற விவகாரம் ஊடகங்களால் பல முறை யூகங்களாக எழுதப்பட்ட போதும், இதுதான் காரணம் என திட்டவட்டமாக திமுக தரப்பும் குஷ்பு தரப்பும் வெளிப்படுத்தவில்லை.
இருப்பினும் தி.மு.க.வில் இருந்து அவர் விலகியதற்கான 'காரண'த்தை பல முறை செய்தியாளர்கள் கேட்ட போதும் தொடர்ந்து குஷ்பு அதை வெளிப்படுத்த மறுத்து வருகிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பேட்டியளித்த குஷ்புவிடம் இது தொடர்பாக மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனாலும் குஷ்பு தாம் தி.மு.க.வில் இருந்து வெளியேறதற்கு காரணம் இருக்கிறது; அதை நான் வெளிப்படுத்த மாட்டேன்;
எனக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் தெரிந்த அந்த விஷயத்தை 3வது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டேன்; எப்படி நீங்கள் கேட்டாலும் நிச்சயம் என் நான் அதை தெரிவிக்கமாட்டேன் என்று மீண்டும் மீண்டும் குஷ்பு திட்டவட்டமாக பதிலளித்திருந்தார்

தீனி போட விரும்பவில்லை.. தலைவருக்கு தெரியும்.... இது தொடர்பாக புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் குஷ்பு கூறியதாவது: எல்லாருக்கும் சுதந்திரம் இருக்குது; அவங்க யோசனை பிரகாரம் யோசிக்கிறதுக்கும் என்ன நினைக்கிறாங்களோ அதை பேசறதுக்கும் சுதந்திரம் இருக்குது; அதை நான் எல்லாருக்கும் தெரியப்படுத்தனும்னு அவசியம் இல்லைன்னு எனக்கு தோணுது.. எனக்கும் தலைவருக்கும் பிராப்ளம் இருந்ததா? எனக்கும் தளபதிக்கும் பிராப்ளம் இருந்ததா? எனக்கும் கனிக்கும் பிராப்ளம் இருந்ததா? எனக்கும் வேற யாருக்கும் பிராப்ளம் இருந்ததா?ன்னு நிறைய வந்துகிட்டே இருக்கு.. இதற்கெல்லாம் நான் தீனி போட விரும்பலை.. இங்க இல்லைன்னு சொன்னாக்கா அப்ப அங்க இருந்ததா?ன்னு வரும்.. எதுக்கு தேவையில்லாத விஷயங்களுக்கு தீனி போட்டு வளர்க்கனும்னு அவசியமே இல்லை.. பிரச்சனைகள் இருந்ததுன்னு நான் சொல்லலை.. மர்மம் இருக்குன்னும் நான் சொல்லலை... ஆனால் காரணங்கள் கண்டிப்பாக இருந்தது.. அதை நான் சொல்ல விரும்பவில்லை. இருந்தாலும் என்ன காரணங்கிறதை அவங்களே முடிவு பண்ணிக்கலாம். திமுகவில் இருந்து நான் ஏன் வெளியேறினேங்கிற காரணம் என்கிட்ட இருந்து உங்களுக்கு கிடைக்கப் போறது இல்லை.. நான் ஏன் வெளியேறினேன்னு எனக்கு தெரியும் தலைவருக்கும் (கருணாநிதிக்கு) தெரியும்.. அதை மீறி 3வது மனுசனுக்கு தெரியனும்னு அவசியமே கிடையாது அப்படி என்னதான் ரகசியமா இருக்கும்?

Read more //tamil.oneindia.com/ne

கருத்துகள் இல்லை: